சென்னை: நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் திருத்தணியில் ஜூன் 9ம் தேதி கல்யாணம் நடக்கப் போவதாக திருமண அழைப்பிதழ் வலம் வருகிறது.
தமிழ்த் திரையுலகில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலராக வலம் வரும் பிரேம்ஜிக்கு தற்போது ஜஸ்ட் 42 வயதுதான் ஆகிறது. இயக்குநர் - பாடலாசிரியர் கங்கை அமரனின் 2வது மகன். மூத்த மகனான இயக்குநர் வெங்கட் பிரபு திருமணமாகி அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் பிரேம்ஜி மட்டும் தொடர்ந்து பேச்சலராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கும் எல்லோருமே எப்பப்பா கல்யாணம் என்றுதான் முதலில் ஆரம்பிப்பார்கள்.
இந்த நிலையில் கண்டிப்பாக இந்த ஆண்டு எனது திருமணம் இருக்கும் என்று சமீபத்தில் கூறியிருந்தார் பிரேம்ஜி. இந்தப் பின்னணியில் தற்போது ஒரு திருமண அழைப்பிதழ் வலம் வருகிறது. அதில் நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான அழைப்பிதழா அல்லது ஏதாவது வதந்தியா என்று தெரியவில்லை. இந்த திருமண அழைப்பிதழ் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக ஒரு பாடகியுடன் பிரேம்ஜிக்கு காதல் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வேறு ஒரு பெயர் மணப்பெண்ணாக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தால் என்ன, பிரேம்ஜிக்கு கல்யாணம் நடந்தால் அதை விட சந்தோஷமான விஷயம் வேறு இருக்க முடியாது.. எத்தனையோ பேரை சிரிக்க வைத்து மகிழ்விப்பவர் பிரேம்ஜி.. அவரும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதைத் தவிர வேறு சிறப்பு இருக்க முடியாது.. அட்வான்ஸ் கல்யாண வாழ்த்துகள் பிரேம்ஜி சார்!.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}