சென்னை: நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் திருத்தணியில் ஜூன் 9ம் தேதி கல்யாணம் நடக்கப் போவதாக திருமண அழைப்பிதழ் வலம் வருகிறது.
தமிழ்த் திரையுலகில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலராக வலம் வரும் பிரேம்ஜிக்கு தற்போது ஜஸ்ட் 42 வயதுதான் ஆகிறது. இயக்குநர் - பாடலாசிரியர் கங்கை அமரனின் 2வது மகன். மூத்த மகனான இயக்குநர் வெங்கட் பிரபு திருமணமாகி அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் பிரேம்ஜி மட்டும் தொடர்ந்து பேச்சலராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கும் எல்லோருமே எப்பப்பா கல்யாணம் என்றுதான் முதலில் ஆரம்பிப்பார்கள்.

இந்த நிலையில் கண்டிப்பாக இந்த ஆண்டு எனது திருமணம் இருக்கும் என்று சமீபத்தில் கூறியிருந்தார் பிரேம்ஜி. இந்தப் பின்னணியில் தற்போது ஒரு திருமண அழைப்பிதழ் வலம் வருகிறது. அதில் நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான அழைப்பிதழா அல்லது ஏதாவது வதந்தியா என்று தெரியவில்லை. இந்த திருமண அழைப்பிதழ் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக ஒரு பாடகியுடன் பிரேம்ஜிக்கு காதல் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வேறு ஒரு பெயர் மணப்பெண்ணாக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தால் என்ன, பிரேம்ஜிக்கு கல்யாணம் நடந்தால் அதை விட சந்தோஷமான விஷயம் வேறு இருக்க முடியாது.. எத்தனையோ பேரை சிரிக்க வைத்து மகிழ்விப்பவர் பிரேம்ஜி.. அவரும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதைத் தவிர வேறு சிறப்பு இருக்க முடியாது.. அட்வான்ஸ் கல்யாண வாழ்த்துகள் பிரேம்ஜி சார்!.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}