சென்னை: நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் திருத்தணியில் ஜூன் 9ம் தேதி கல்யாணம் நடக்கப் போவதாக திருமண அழைப்பிதழ் வலம் வருகிறது.
தமிழ்த் திரையுலகில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலராக வலம் வரும் பிரேம்ஜிக்கு தற்போது ஜஸ்ட் 42 வயதுதான் ஆகிறது. இயக்குநர் - பாடலாசிரியர் கங்கை அமரனின் 2வது மகன். மூத்த மகனான இயக்குநர் வெங்கட் பிரபு திருமணமாகி அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் பிரேம்ஜி மட்டும் தொடர்ந்து பேச்சலராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கும் எல்லோருமே எப்பப்பா கல்யாணம் என்றுதான் முதலில் ஆரம்பிப்பார்கள்.

இந்த நிலையில் கண்டிப்பாக இந்த ஆண்டு எனது திருமணம் இருக்கும் என்று சமீபத்தில் கூறியிருந்தார் பிரேம்ஜி. இந்தப் பின்னணியில் தற்போது ஒரு திருமண அழைப்பிதழ் வலம் வருகிறது. அதில் நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான அழைப்பிதழா அல்லது ஏதாவது வதந்தியா என்று தெரியவில்லை. இந்த திருமண அழைப்பிதழ் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக ஒரு பாடகியுடன் பிரேம்ஜிக்கு காதல் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வேறு ஒரு பெயர் மணப்பெண்ணாக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தால் என்ன, பிரேம்ஜிக்கு கல்யாணம் நடந்தால் அதை விட சந்தோஷமான விஷயம் வேறு இருக்க முடியாது.. எத்தனையோ பேரை சிரிக்க வைத்து மகிழ்விப்பவர் பிரேம்ஜி.. அவரும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதைத் தவிர வேறு சிறப்பு இருக்க முடியாது.. அட்வான்ஸ் கல்யாண வாழ்த்துகள் பிரேம்ஜி சார்!.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}