சென்னை: நடிகர் விஜய் கட்டியுள்ள சாய்பாபா கோவிலுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இன்று சாமி கும்பிட்டார்.
நடிகர் விஜய் தனது தாயாரின் விருப்பத்திற்காக அவர் விரும்பிய படி சாய்பாபாவிற்கு ஒரு கோவிலை கட்டியுள்ளார். சென்னையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் குறித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. காரணம் இந்த கோவில் கட்டப்பட்டது குறித்து எந்தவிதமான தகவலும் அதற்கு முன்பு வரை வெளியாகவில்லை. எனவே திடீரென இந்த கோவில் குறித்த செய்திகள் வெளியானதால் ரசிகர்களும் கூட ஆச்சரியமே அடைந்தனர்.

இந்த கோவில் குறித்து விஜயின் தாயாரம் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் கூறுகையில், எனக்கு சாய்பாபாவிற்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. எனது மகனிடம் சொல்லி இருந்தேன். அவர் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த சாய்பாபா கோவில் பிரபலம் அடைய ஆரம்பித்துள்ளது.
நடிகரும், விஜயின் நண்பர்களில் ஒருவருமான ராகவாலாரன்ஸ் இந்த கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை அங்கு ஷோபா சந்திரசேகர் ராகவா லாரன்சை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் சென்ற ராகவா லாரன்ஸ் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில் எனது நண்பன் விஜய் கட்டியுள்ள சாய்பாபா கோவிலுக்கு இன்று சென்றேன். என்னுடன் ஷோபா அம்மாவும் வந்திருந்தார்.
நான் ராகவேந்திரா சுவாமி கோவில் கட்டிய போது அவர் எனக்காக அந்த கோவிலுக்கு வந்து பாடி மகிழ்வித்தார். எங்களை வந்து ஆசீர்வதித்தார். இப்போது அவர் கட்டியுள்ள அந்த கோவிலுக்கு நான் அவருடன் சென்றுள்ளேன். என்னுடைய நண்பன் விஜய்க்கு எனது இதயம் மறந்து இதயபூர்வமான நன்றிகளும்.

இந்த கோவிலுக்கு வந்த போது எனக்கு மனம் நிறைந்த காணப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் தவறாமல் இந்த கோவிலுக்கு வந்து சாய்பாபாவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}