சென்னை: சோசியல் மீடியாவில் ட்ரெண்டான எனக்கொரு wife வேண்டுமடா என்ற குறும்படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் குறும்படம் மிகவும் நன்றாக இருந்தது. என்னை பெரிதும் கவர்ந்தது என பாராட்டியுள்ளார்.
கடந்த மார்ச் 3ஆம் தேதி எனக்கொரு wife வேண்டுமடா என்ற குறும்படம், ஃபிலிம் டியூட் youtube சேனலில் ரிலீஸ் ஆனது. பத்து நிமிடம் ஓடும் இந்த குறும்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 22 வருடங்களாக பத்திரிக்கை துறையில் பணியாற்றிய ஜியா இந்த குறும்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல் இந்த குறும்படத்திற்கு முதல் முறையாக இசையும் அமைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்வன் என்ற குறும்படத்தை இயக்கியவர். இது இவருடைய இரண்டாவது குறும்படம் ஆகும். இந்த குறும்படத்தை ஃபிலிம் வில்லேஜ் நிறுவனம் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். பிரசாத் ஏ.கே எடிட்டிங் செய்ய, அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் செபாஸ்டின், அந்தோணி, அக்ஷயா, அனகா, வினிதா, மௌனிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த குறும்படம் ஹியூமர் கலந்த முழு நீள டிராமாவாக உருவாகியுள்ளதாம். மேட்ரிமோனியில் திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞன் ஒருவன், நான்கு பெண்களை சந்திக்கிறான். அப்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே இப்படத்தின் கதையாகும்.

இந்த நிலையில் இந்த குறும்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் இந்த குறும்படம் மிகவும் நன்றாக இருந்தது. என்னை பெரிதும் கவர்ந்தது. ஹியூமர் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. ஜியாவுக்கு, அவரது மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதுபோல திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
{{comments.comment}}