தப்புத்தான்.. இனிமே வடிவேலு பத்தி அவதூறாக பேச மாட்டேன்.. கோர்ட்டில் உறுதி அளித்த சிங்கமுத்து!

Dec 11, 2024,03:52 PM IST

சென்னை: Youtube சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகர் வடிவேலு, ஐந்து கோடி ரூபாய் கேட்டு தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் வடிவேலு பற்றி அவதூறான எந்த கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்திரவாத மனு தாக்கல் செய்துள்ளார்.


நடிகர் சிங்கமுத்து யூடியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகர் வடிவேலு சிங்கமுத்து மீது மான நஷ்ட  வழக்கு தொடர்ந்தார். அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக அதனை ஈடு செய்ய ஐந்து கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறு பேச தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். 




இந்த வழக்கு கடந்த ஆறாம் தேதி விசாரணைக்கு வந்த போது சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவதூறு தெரிவித்த வார்த்தை எது என்பதை நடிகர் வடிவேலு குறிப்பிடவில்லை‌. மாறாக திரைத் துறையில் தெரிவித்த கருத்துக்களை மட்டுமே குறிப்பிட்டு இருந்தார் எனக் கூறினார். அதேபோல்  நடிகர் வடிவேலு தரப்பில் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பார்ப்புவதாக வாதம் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிங்கமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இனிமேல் வடிவேலு பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில்  பேசமாட்டேன்  என  உத்திரவாதம் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டார்.


இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில், வடிவேலு குறித்து  எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டேன். வடிவேலு குறித்து வாய் மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிவிக்க மாட்டேன்  என உத்தரவாதம் அளித்து மனு செய்தார். இதனை ஏற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கை  ஜனவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்