தப்புத்தான்.. இனிமே வடிவேலு பத்தி அவதூறாக பேச மாட்டேன்.. கோர்ட்டில் உறுதி அளித்த சிங்கமுத்து!

Dec 11, 2024,03:52 PM IST

சென்னை: Youtube சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகர் வடிவேலு, ஐந்து கோடி ரூபாய் கேட்டு தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் வடிவேலு பற்றி அவதூறான எந்த கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்திரவாத மனு தாக்கல் செய்துள்ளார்.


நடிகர் சிங்கமுத்து யூடியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகர் வடிவேலு சிங்கமுத்து மீது மான நஷ்ட  வழக்கு தொடர்ந்தார். அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக அதனை ஈடு செய்ய ஐந்து கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறு பேச தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். 




இந்த வழக்கு கடந்த ஆறாம் தேதி விசாரணைக்கு வந்த போது சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவதூறு தெரிவித்த வார்த்தை எது என்பதை நடிகர் வடிவேலு குறிப்பிடவில்லை‌. மாறாக திரைத் துறையில் தெரிவித்த கருத்துக்களை மட்டுமே குறிப்பிட்டு இருந்தார் எனக் கூறினார். அதேபோல்  நடிகர் வடிவேலு தரப்பில் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பார்ப்புவதாக வாதம் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிங்கமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இனிமேல் வடிவேலு பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில்  பேசமாட்டேன்  என  உத்திரவாதம் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டார்.


இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில், வடிவேலு குறித்து  எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டேன். வடிவேலு குறித்து வாய் மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிவிக்க மாட்டேன்  என உத்தரவாதம் அளித்து மனு செய்தார். இதனை ஏற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கை  ஜனவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்