இசைக்கிளியும் அன்னக்கிளியும் சந்தித்தபோது..சூர்யா, மகள் பிருந்தாவுடன் இசைஞானியை சந்தித்த சிவக்குமார்

Mar 19, 2025,04:58 PM IST

சென்னை: இசைஞானி இளையராஜாவை, அவரது முதல் படமான அன்னக்கிளியின் நாயகன் சிவக்குமார் தனது மகன் சூர்யா, மகள் பிருந்தாவுடன் சென்று சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்தார்.


சிவக்குமார்-சுஜாதா இணைந்து நடித்த அன்னக்கிளி படம் தான் இளையராஜா இசையமைத்த முதல்படம். இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையாக அமைந்ததால் அன்று முதல் இளையராஜாவிற்கு சீசன் தொடங்கியது. இத்திரைப்படத்தில் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள், மேற்கத்திய இசையுடனும், கர்நாடக இசையுடனும் இணைந்திருந்தன.  பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாசலம் ஆவார். 




இத்திரைப்படத்தில் பஞ்சு அருணாசலம் இராசய்யா என்ற பெயர் கொண்டவரை இளையராஜா என்று பெயரை மாற்றினார். பல்வேறு இசைக்கருவிகளின் நுட்பங்களை இப்படத்தில் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா. "மச்சான பார்த்தீங்களா" பாடல், இளையராஜா, அவரது இசைக்குழுவினரால் திரைப்பட வெளியீட்டிற்கு முன்பே ஒரு திருமணத்தில் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டது  என்று கூறப்பட்டதும் உண்டு. மச்சானை பாத்தீங்களா, அன்னக்கிளியே உன்னைத் தேடுதே உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் அப்படியொரு வெற்றியைப் பெற்றது.


சிவக்குமாரும், சுஜாதா, படாபட், ஜெயலட்சுமி ஆகியோர்  நடித்த இந்தப் படம் பஞ்சு அருணாசலம் தயாரித்ததாகும். இந்த படத்தின் டைரக்ஷனை தேவராஜ்-மோகன் கவனித்தனர்.  1976ம் ஆண்டு மே 14ம் தேதி வெளியாகியது. முதல் இரண்டு நாட்கள் சரியாக ஓடாத நிலையில், 3ம் நாளில் இருந்து தினமும் ஹவுஸ்புல் தானாம். அன்னக்கிளி படம் பல ஊர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. அதிலும் குறிப்பாக கோவை இருதயா தியேட்டரில் 205 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனையும் படைத்தது.  


இளையராஜா வந்த பிறகு, இந்திப் பாடல்களின் ஆதிக்கத்தில் இருந்த தமிழகம், அப்படியே இளையராஜா இசையில் லயிக்க ஆரம்பித்தது. ‘அன்னக்கிளி’யை அடுத்து, வரிசையாக படங்கள் வர ஆரம்பித்தன இளையராஜாவுக்கு. தேவராஜ் - மோகன் இயக்கம், சிவகுமார், இளையராஜா கூட்டணி வெற்றிக் கூட்டணி எனப் பேசப்பட்டது. இந்தக் கூட்டணியில் வந்ததுதான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. பழமையையும் புதுமையையும் மோதிக்கொள்ளவிட்ட படம் தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாமன் ஒருநா மல்லிகப்பூ கொடுத்தான், வெத்தல வெத்தல வெத்தலயோ, என்னுள்ளில் ஏதோ ஏங்கும் கீதம், உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி என்று எல்லாப் பாட்டுமே செம ஹிட். 


அன்றைய காலகட்டத்தில் இந்தப் பாடலைப் பாடாத தெருக்களோ கல்யாணவீடுகளோ திருவிழாக்களோ மேடைக் கச்சேரிகளோ இல்லை. சிவகுமாருக்கு இந்தப் படம் 100வது படம். அட்டகாச வெற்றியைத் தந்தது. 79ம் வருடம் மே மாதம் 18ம் தேதி ரோசாப்பூ ரவிக்கைக்காரி வெளியானது. இவ்வாறாக பல வெற்றிப்படங்கள் சிவக்குமார்-இளையராஜா கூட்டணியில் வெளிவந்து வெற்றி அடைந்தன. அதன்பின்னர் ஒரு கட்டத்தில் சிவக்குமார் நடிப்பதை நிறுத்தி விட்டார். 




ஆனால் இளையராஜா இன்று வரை தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வலம் வருகிறார் என்றே சொல்லலாம். இவ்விருவரும் திரைப்படங்களிலில் மட்டும் இணைந்திருக்கவில்லை நட்பிலும் இன்று வரை இணைந்து தான் இருக்கின்றனர். இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் சிம்பொனி இசை எழுதி அதை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாழ்த்து தெரிவத்து வருகின்றனர். 


இந்த நிலையில், நடிகர் சிவக்குமார் மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோருடன் நேரில் சென்று இளையராஜாவிற்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்