மதுரை: மாமன் படம் வெற்றியடைய வேண்டுமென மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. இது வேதனையாக இருக்கிறது என நடிகர் சூரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்
நடிகர் சூரியின் விடுதலை படத்தின் வெற்றியை தொடந்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமன். இவர் இயக்கத்தில் விலங்கு’ வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது . இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார்.
இவர்களுடன், ராஜ்கிராண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதையை சூரி எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூரி நடித்த மாமன் திரைப்படம் இன்று வெளியானது. இப்படம் ஃபேமிலி சப்ஜெக்டில் எமோஷனல் கலந்த படமாக இருப்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே சமயத்தில் படத்தின் எமோஷனல் காட்சிகளில் சூரி தனது எதார்த்தமான நடிப்பை பிரதிபலித்துள்ளார். மேலும் இயக்குனர் பிரசாத் பாண்டியராஜ் படத்தின் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதமும், மாமன் மருமகன் சென்டிமென்ட் காட்சிகளும், அதற்கிடையே வரும் சூரியின் மனைவி கதாபாத்திரமும் ரசியும்படி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வெளியான மாமன் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்ட செயல் குறித்து நடிகர் சூரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில், மாமன் படம் வெற்றி அடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று செல்வதற்கு எனக்கு வெட்கமாக உள்ளது. தம்பிகளா இது ரொம்ப முட்டாள்தனமானது. கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும். அதை விட்டுவிட்டு மண் சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடிவிடுமா? என்ன.
இந்த செய்தி மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்தப் பணத்திற்கு நாலு பேருக்கு தண்ணீர், மோர், உணவு, வாங்கி கொடுத்திருக்கலாம் இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் என கூறியுள்ளார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}