உலகத்தின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் இளையராஜா.. நடிகர் சூரி புகழாரம்

Nov 18, 2024,05:01 PM IST

திருச்செந்தூர்: உலகத்தின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் இளையராஜா. நானும் அவரது காலத்தில் நடிகராக இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன். அவரது பாடல்கள் வாழ்வியல் உண்மைகளை பிரதிபலிக்கும். இளையராஜா ஒரு புத்தகம் என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக உருவெடுத்த சூரி தற்போது கதாநாயகனாக உருமாறியுள்ளார். இவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், கடந்த ஆண்டு திருச்செந்தூர் முருகனை பார்க்க வந்திருந்தேன். அதே போல இந்த ஆண்டும் ஐயாவின் ஆசியை பெற வந்திருக்கிறேன். வரிசையாக நிறைய படத்தில் நடிக்க உள்ளேன். விடுதலை 2 இப்பொழுது வரப்போகிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதி என்று நினைக்கின்றேன். விடுதலை படத்தின் முதல் பாகம் எப்படி உங்களுக்கு அனைவருக்கும் பிடித்திருந்ததோ, அதேபோல விடுதலை 2வும் உங்களுக்கு பிடிக்கும்.




கங்குவா படம் நன்றாக உள்ளது. ஒரு ரசிகராக படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. என் குடும்பத்தோடு திரையரங்குக்கு சென்று பார்த்தேன். கங்குவா படம் குறித்து  எதிர்மறையாக சிலர் கூறுகிறார்கள். அதை நம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்மறை விமர்சனங்களால் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர். அதிகமானோர் நேர்மறையாக சொல்கிறார்கள். கங்குவா பட குழு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த எண்ணத்திற்கு நான் தலை வணங்குகிறேன். பல பேருடைய உழைப்பு இந்த படத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்.


விடுதலை 2 திரைப்படத்தில் இளையராஜாவின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. உலகின் தலைசிறந்த மனிதர்களுள் இளையராஜா ஒருவர். 82 வயதிலும் இசையை எழுதி இசை அமைத்து பாடியிருக்கிறார். அவர் உள்ள சினிமாவில் நானும் ஒரு நடிகனாக இருக்கிறேன் என்பதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.  இசையமைப்பாளர் காலத்திற்கும் நாம் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான் இளையராஜா. இறைவன் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இளைராஜாவிற்கு கொடுத்து இன்னும் பல படங்களில் அவர் இமையமைக்க நான் இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்