ராமேஸ்வரம்: விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வந்தா தப்பு இல்லையே என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சட்டசபைத் தேர்தலே தங்களது இலக்கு என்றும் தெளிவுபடுத்தி விட்டா். இந்த நிலையில் விஜய்க்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த நடிகர் வடிவேலுவிடம் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தனது பாணியில் ஜாலியாக பதிலளித்தார் வடிவேலு.

அவர் கூறுகையில், எல்லாருமே வரலாமே.. ஏன் நீங்க கூட வரலாமே.. வரலாமா.. என்னாது வேலை இருக்கா.. தலைவா, உங்களைத்தான்.. இப்படியே எவ்வளவு நாள்தான் வீடியோ பிடிச்சுட்டு நிப்பீங்க.. டக்குன்னு வரலாம்ல.. வாங்க, எல்லாரும் வாங்க.. கட்சி ஆரம்பிச்சுட்டுப் போக வேண்டியதானே.. மக்களுக்கு நல்லது செய்ய யாரா இருந்தாலும் வரலாமே.. யாரும் வரக் கூடாதுன்னு சொல்லக் கூடாதுல்ல.
எல்லோரும் வந்தாங்க.. டிராஜேந்தர் வந்தாரு.. ராமராஜன் வந்தாரு.. பாக்யராஜ் வந்தாங்க.. எல்லாரும் நல்லது செய்யத்தானே வந்தோம்.. வரட்டும்.. வர்றவங்களை வரவேற்கணும். வந்து மக்களுக்கு நல்லது செய்ட்டும். தப்பு கிடையாதுல்ல.. வரட்டும். அவ்வளவுதானே என்று கலகலப்பாக பேசி விட்டுக் கிளம்பினார் வடிவேலு.
விஜய்யும் வடிவேலுவும் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளன என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வடிவேலு ஆதரித்து வரவேற்றிருக்கிறார். விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கும்போது அவருடன் சேர்ந்து வடிவேலுவும் ஆதரவாக களம் குதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}