ராமேஸ்வரம்: விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வந்தா தப்பு இல்லையே என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சட்டசபைத் தேர்தலே தங்களது இலக்கு என்றும் தெளிவுபடுத்தி விட்டா். இந்த நிலையில் விஜய்க்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த நடிகர் வடிவேலுவிடம் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தனது பாணியில் ஜாலியாக பதிலளித்தார் வடிவேலு.
அவர் கூறுகையில், எல்லாருமே வரலாமே.. ஏன் நீங்க கூட வரலாமே.. வரலாமா.. என்னாது வேலை இருக்கா.. தலைவா, உங்களைத்தான்.. இப்படியே எவ்வளவு நாள்தான் வீடியோ பிடிச்சுட்டு நிப்பீங்க.. டக்குன்னு வரலாம்ல.. வாங்க, எல்லாரும் வாங்க.. கட்சி ஆரம்பிச்சுட்டுப் போக வேண்டியதானே.. மக்களுக்கு நல்லது செய்ய யாரா இருந்தாலும் வரலாமே.. யாரும் வரக் கூடாதுன்னு சொல்லக் கூடாதுல்ல.
எல்லோரும் வந்தாங்க.. டிராஜேந்தர் வந்தாரு.. ராமராஜன் வந்தாரு.. பாக்யராஜ் வந்தாங்க.. எல்லாரும் நல்லது செய்யத்தானே வந்தோம்.. வரட்டும்.. வர்றவங்களை வரவேற்கணும். வந்து மக்களுக்கு நல்லது செய்ட்டும். தப்பு கிடையாதுல்ல.. வரட்டும். அவ்வளவுதானே என்று கலகலப்பாக பேசி விட்டுக் கிளம்பினார் வடிவேலு.
விஜய்யும் வடிவேலுவும் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளன என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வடிவேலு ஆதரித்து வரவேற்றிருக்கிறார். விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கும்போது அவருடன் சேர்ந்து வடிவேலுவும் ஆதரவாக களம் குதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}