நடிகர் விஜய், அண்ணாமலை வீடுகளில் பறந்த தேசியக் கொடி.. சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

Aug 15, 2024,10:16 AM IST

சென்னை: 78வது சுதந்திர தினத்தையொட்டி மக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மகிழ்ந்தனர். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றினர்.


நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசுகள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் பெரும் ஆர்வத்துடன் தங்களது வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றினர்.




தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மகிழ்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத் திருநாளை, நாம் அனைவரும் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறோம். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த, ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடி (#HarGharTiranga) ஏற்ற வேண்டும் என்ற அறிவுரையின்படி, இன்று காலை சென்னையில் எனது இல்லத்தில் நமது பெருமைமிகு தேசியக் கொடியினை ஏற்றி வணங்கினோம். 


உலக அரங்கில் நமது பாரதத்தின் பெருமை மிகுந்த தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறப்பது நமக்கெல்லாம் பெருமிதத்தைத் தருகிறது.   எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தினால் பெற்ற சுதந்திரத்தினைப் பேணிக் காப்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.


நடிகர் விஜய் வீட்டில் பறந்த தேசியக் கொடி




இதேபோல விஜய்யின் திருவான்மியூர் வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதேபோல பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திலும் தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தது. இதை விஜய் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரப்பி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்