சென்னை: 78வது சுதந்திர தினத்தையொட்டி மக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மகிழ்ந்தனர். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றினர்.
நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசுகள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் பெரும் ஆர்வத்துடன் தங்களது வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றினர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மகிழ்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத் திருநாளை, நாம் அனைவரும் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறோம். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த, ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடி (#HarGharTiranga) ஏற்ற வேண்டும் என்ற அறிவுரையின்படி, இன்று காலை சென்னையில் எனது இல்லத்தில் நமது பெருமைமிகு தேசியக் கொடியினை ஏற்றி வணங்கினோம்.
உலக அரங்கில் நமது பாரதத்தின் பெருமை மிகுந்த தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறப்பது நமக்கெல்லாம் பெருமிதத்தைத் தருகிறது. எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தினால் பெற்ற சுதந்திரத்தினைப் பேணிக் காப்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் வீட்டில் பறந்த தேசியக் கொடி

இதேபோல விஜய்யின் திருவான்மியூர் வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதேபோல பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திலும் தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தது. இதை விஜய் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரப்பி வருகின்றனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}