சென்னை: நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் சங்க கட்டிடப்பணி சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிதி கிடைக்காததினால் பாதியில் கட்டிபணி நடைபெறாமல் நின்று விட்டது. இந்நிலையில் அந்த கட்டிடப்பணியை முடிக்க இன்னும் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இதற்காக வங்கியில் நடிகர் சங்கம் சார்பில் நிதி கேட்கப்பட்ட போது, குறைந்த பட்சம் வைப்புத்தொகையாக ரூ.13 கோடி ரூபாய் டெபாசிட் செய்தால் தான் கடன் வழங்கப்படும் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கமலஹாசன், கார்த்தி ஆகியோர் தலா ஒரு கோடி வழங்கிய நிலையில், இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார். தனது வங்கிக் கணக்கு மூலம் இந்த ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளார் நடிகர் விஜய்.
இதற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளைத் தொடர எதுவாக நடிகர் விஜய் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் வழங்கிய நிதியுடன் சுமார் ரூ.12 கோடி நிதி வைப்புத்தொகையாக உள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}