சென்னை: நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று த.வெ.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது போலவே இந்தாண்டும் ஓட்டுப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமாகிய நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்.

கடந்த முறை விஜய் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார். அவர் சைக்கிளில் வந்ததற்கு பல விதமான காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று எப்படி வந்து வாக்கு போடுவார், என்ன கலர் சட்டை அணிந்து வருவார் என்ற எதிர் பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு நாட்களாகவே பேசு பொருளாகியிருந்தது.
அதுவும் அவர் கட்சி ஆரம்பித்த பிறகு, நடை பெறும் முதல் தேர்தல் என்பதால் அவரது தொண்டர்களும் மிகுந்த ஆர்வத்துடன் விஜய் வீட்டின் முன்பே பல மணி நேரம் காத்திருந்தனர். இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கோட். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில் இருந்த விஜய் இன்று காலையில் தான் வாக்களிப்பதற்காக இந்தியா வந்துள்ளார்.
அதன் பின்னர் வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக காரில் வந்தார். இந்த முறை எந்த அரசியல் குறியீடும் இல்லாமல் வெள்ளை சட்டை அணிந்து வந்து வாக்களித்தார். விஜய்யின் வருகைக்காக பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்து கொண்டனர். விஜய் கூட்டத்தில் சிக்கிக் கொண்டதால் காவலர்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அனைவரும் வாக்கு அழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}