சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தனது ஜனநாயக கடமையை முடிந்த கையோடு வாக்களிக்க வந்த 80 வயது முதாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கப்பதிவு தொடங்கியதில் இருந்தே பிரலங்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் என அனைத்து தரப்பினர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி வரிசையில் நின்று வாக்களித்தார். இவர் தென்மேற்கு பருவகாற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.
பெரும்பாலானவர்கள் நடிகர் நடிகைகளுடன் நின்று தான் செல்பி எடுத்துக்கொள்வார்கள். ஆனால் விஜய் சேதுபதி தனது வாக்கிணை பதிவு செய்து விட்டு 80 வயதுடைய மூதாட்டியுடன் செல்பி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகின்றது.
அப்புறம் மக்களே நீங்க ஓட்டுப் போட்டாச்சா.. போடாட்டி இப்பவே கிளம்பிப் போய் அதை செஞ்சு முடிங்க புண்ணியமாப் போகும்!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}