கேரளாவை கலக்கும் நடிகர் விஜய்.. சேட்டன்மார், சேச்சிமார்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி!

Mar 23, 2024,10:06 AM IST

திருவனந்தபுரம்: நடிகர் விஜய் கேரளாவில் தொடர்ந்து அலை பரப்பி வருகிறார். தன்னை காண வந்த ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசி செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் நடிகர் விஜய்.


 வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதிநவீன தொழில் நட்ப வசதியுடன் கூடிய இந்த படமானது முக்கிய காட்சிகளுக்காக கேரளாவுக்கு இடப்பெயர்ந்துள்ளது.




 திருவனந்தபுரத்தில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடிகர் விஜய் அங்கு முகாமிட்டுள்ளார். விஜய்க்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் மிகப்பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விஜய் வருகையை தொடர்ந்து அவரைக் காண தினசரி படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகின்றனர். விஜயும் ரசிகர்களை கண்டு அவர்களுடன் மைக்கில் பேசியும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.


நேற்று இதைப் போல விஜயை காண ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். அவர்களிடையே படப்பிடிப்பு வேன் மீது ஏறி நின்று விஜய் வழக்கம் போல பேசினார். செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.


 அதில் அனியத்திமார் அனியன்மார் சேட்டன்மார் சேச்சிமார் அம்மமார் என்று மலையாளத்திலேயே கூறி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். விஜய் தொடர்ந்து கேரளாவில் பரபரப்பில் வைத்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்