திருவனந்தபுரம்: நடிகர் விஜய் கேரளாவில் தொடர்ந்து அலை பரப்பி வருகிறார். தன்னை காண வந்த ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசி செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் நடிகர் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதிநவீன தொழில் நட்ப வசதியுடன் கூடிய இந்த படமானது முக்கிய காட்சிகளுக்காக கேரளாவுக்கு இடப்பெயர்ந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடிகர் விஜய் அங்கு முகாமிட்டுள்ளார். விஜய்க்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் மிகப்பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விஜய் வருகையை தொடர்ந்து அவரைக் காண தினசரி படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகின்றனர். விஜயும் ரசிகர்களை கண்டு அவர்களுடன் மைக்கில் பேசியும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.
நேற்று இதைப் போல விஜயை காண ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். அவர்களிடையே படப்பிடிப்பு வேன் மீது ஏறி நின்று விஜய் வழக்கம் போல பேசினார். செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அனியத்திமார் அனியன்மார் சேட்டன்மார் சேச்சிமார் அம்மமார் என்று மலையாளத்திலேயே கூறி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். விஜய் தொடர்ந்து கேரளாவில் பரபரப்பில் வைத்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}