திருவனந்தபுரம்: நடிகர் விஜய் கேரளாவில் தொடர்ந்து அலை பரப்பி வருகிறார். தன்னை காண வந்த ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசி செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் நடிகர் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதிநவீன தொழில் நட்ப வசதியுடன் கூடிய இந்த படமானது முக்கிய காட்சிகளுக்காக கேரளாவுக்கு இடப்பெயர்ந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடிகர் விஜய் அங்கு முகாமிட்டுள்ளார். விஜய்க்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் மிகப்பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விஜய் வருகையை தொடர்ந்து அவரைக் காண தினசரி படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகின்றனர். விஜயும் ரசிகர்களை கண்டு அவர்களுடன் மைக்கில் பேசியும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.
நேற்று இதைப் போல விஜயை காண ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். அவர்களிடையே படப்பிடிப்பு வேன் மீது ஏறி நின்று விஜய் வழக்கம் போல பேசினார். செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அனியத்திமார் அனியன்மார் சேட்டன்மார் சேச்சிமார் அம்மமார் என்று மலையாளத்திலேயே கூறி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். விஜய் தொடர்ந்து கேரளாவில் பரபரப்பில் வைத்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}