சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த வாரம் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் விஜய் அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்து விட்டார். மீண்டும் ஒரு கோலாகலமான விழாவாக இது நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் 10 மற்றும் 12 வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடந்த ஆண்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை தடுக்க இந்த வருடம் கல்வி விருது வழங்கும் விழாவை இரண்டு கட்டமாக நடத்த தமிழகம் வெற்றிக் கழகம் திட்டமிட்டது.
அதன்படி முதற்கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த வாரம் 28ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், ஆகிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில் 725 மாணவர்கள் உட்பட மொத்தம் 3500 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக கட்சி கழகம் சார்பில் நடைபெறும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இதற்காக நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அதிகாலையிலேயே மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் அதிகாலையிலேயே வந்து விட்டார். தற்போது விஜய் பேசி வருகிறார். இதையடுத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}