சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த வாரம் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் விஜய் அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்து விட்டார். மீண்டும் ஒரு கோலாகலமான விழாவாக இது நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் 10 மற்றும் 12 வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடந்த ஆண்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை தடுக்க இந்த வருடம் கல்வி விருது வழங்கும் விழாவை இரண்டு கட்டமாக நடத்த தமிழகம் வெற்றிக் கழகம் திட்டமிட்டது.
அதன்படி முதற்கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த வாரம் 28ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், ஆகிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில் 725 மாணவர்கள் உட்பட மொத்தம் 3500 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக கட்சி கழகம் சார்பில் நடைபெறும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இதற்காக நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அதிகாலையிலேயே மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் அதிகாலையிலேயே வந்து விட்டார். தற்போது விஜய் பேசி வருகிறார். இதையடுத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}