சென்னை: செந்தூரப்பாண்டி மூலம் தனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்துக்கு, நடிகர் விஜய் இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் விஜயகாந்த்துக்கும், விஜய்க்கும் இடையே நெருங்கிய பந்தம் உள்ளது. தனக்கு உயர்வு கொடுத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்பது ஒரு முக்கியக் காரணம் என்றாலும் கூட விஜய் மீது தனிப்பாசம் கொண்டவர் விஜயகாந்த்.
அவரது சில படங்களில் சிறுவனாக நடித்துள்ளார் விஜய். அதன் பிறகு அவர் ஹீரோவான பின்னர் அவருக்கென்று ஒரு ஸ்டார் வேல்யூ கிடைக்க விஜயகாந்த்தான் காரணம். விஜய்க்காக, அவருடைய செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். இந்தப் படத்தில்தான் விஜய்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. பலரும் அவரைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

இந்த நன்றி விசுவாசம் விஜய்யிடமிருந்து இதுவரை போகவில்லை. விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் விஜய். இந்த நிலையில் இன்று இரவு விஜய், விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்தார். பலத்த கூட்ட நெரிசலுக்கு மத்தியில் மிகுந்த சிரமப்பட்டு வந்து சேர்ந்தார் விஜய்.
கலங்கிப் போயிருந்த கண்களுடன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வணங்கினார் விஜய். பின்னர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினார் விஜய். அவரிடம் கண் கலங்கியபடி தோளைப் பிடித்துக் கொண்டு பேசினார் பிரேமலதா விஜயகாந்த். பின்னர் விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார் விஜய்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}