சென்னை: செந்தூரப்பாண்டி மூலம் தனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்துக்கு, நடிகர் விஜய் இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் விஜயகாந்த்துக்கும், விஜய்க்கும் இடையே நெருங்கிய பந்தம் உள்ளது. தனக்கு உயர்வு கொடுத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்பது ஒரு முக்கியக் காரணம் என்றாலும் கூட விஜய் மீது தனிப்பாசம் கொண்டவர் விஜயகாந்த்.
அவரது சில படங்களில் சிறுவனாக நடித்துள்ளார் விஜய். அதன் பிறகு அவர் ஹீரோவான பின்னர் அவருக்கென்று ஒரு ஸ்டார் வேல்யூ கிடைக்க விஜயகாந்த்தான் காரணம். விஜய்க்காக, அவருடைய செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். இந்தப் படத்தில்தான் விஜய்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. பலரும் அவரைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

இந்த நன்றி விசுவாசம் விஜய்யிடமிருந்து இதுவரை போகவில்லை. விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் விஜய். இந்த நிலையில் இன்று இரவு விஜய், விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்தார். பலத்த கூட்ட நெரிசலுக்கு மத்தியில் மிகுந்த சிரமப்பட்டு வந்து சேர்ந்தார் விஜய்.
கலங்கிப் போயிருந்த கண்களுடன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வணங்கினார் விஜய். பின்னர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினார் விஜய். அவரிடம் கண் கலங்கியபடி தோளைப் பிடித்துக் கொண்டு பேசினார் பிரேமலதா விஜயகாந்த். பின்னர் விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார் விஜய்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}