"செந்தூரப்பாண்டி" நாயகனுக்கு.. கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய்

Dec 28, 2023,10:40 PM IST

சென்னை: செந்தூரப்பாண்டி மூலம் தனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்த  கேப்டன் விஜயகாந்த்துக்கு, நடிகர் விஜய் இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.


நடிகர் விஜயகாந்த்துக்கும், விஜய்க்கும் இடையே நெருங்கிய பந்தம் உள்ளது. தனக்கு உயர்வு கொடுத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்பது ஒரு முக்கியக் காரணம் என்றாலும் கூட விஜய் மீது தனிப்பாசம் கொண்டவர் விஜயகாந்த்.


அவரது சில படங்களில் சிறுவனாக நடித்துள்ளார் விஜய். அதன் பிறகு அவர் ஹீரோவான பின்னர் அவருக்கென்று ஒரு ஸ்டார் வேல்யூ கிடைக்க விஜயகாந்த்தான் காரணம். விஜய்க்காக, அவருடைய செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். இந்தப் படத்தில்தான் விஜய்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. பலரும் அவரைக் கவனிக்க ஆரம்பித்தனர்.




இந்த நன்றி விசுவாசம் விஜய்யிடமிருந்து இதுவரை போகவில்லை. விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் விஜய். இந்த நிலையில் இன்று இரவு விஜய், விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்தார். பலத்த கூட்ட நெரிசலுக்கு மத்தியில் மிகுந்த சிரமப்பட்டு வந்து சேர்ந்தார் விஜய்.


கலங்கிப் போயிருந்த கண்களுடன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வணங்கினார் விஜய். பின்னர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினார் விஜய். அவரிடம் கண் கலங்கியபடி தோளைப் பிடித்துக் கொண்டு பேசினார் பிரேமலதா விஜயகாந்த். பின்னர் விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார் விஜய்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்