- மஞ்சுளா தேவி
சென்னை: மிச்சாங் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த, நடிகர் விஷால் பேச்சுக்கு மேயர் பிரியா ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நடிகர் விஷால் அரசாங்கத்திற்கு தனது கோரிக்கைகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், வணக்கம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்ப பெய்கின்ற புயல் மழையால் முதலில் கரண்ட் ஆஃப் ஆகிவிடும். அப்புறம் தண்ணீர் தேங்கிவிடும். அப்படியே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடும். இப்ப நான் அண்ணா நகரில் வசிக்கிறேன். என் வீட்டிற்குள் ஒரு அடி வரையில் தண்ணீர் புகுந்து விட்டது. அண்ணா நகரிலேயே இந்த நிலைமை என்றால்.. நீங்க யோசித்துப் பாருங்கள். தாழ்வான பகுதியில் எவ்வாறு இருக்கும் என்று.
2015இல் இதேபோன்று தண்ணீர் வந்தபோது பொது மக்களுக்கு அனைவரும் இறங்கி சேவை செய்தோம். தற்போது 8 வருடம் கழித்தும் அதைவிட மோசமான நிலைமை உள்ளது. இது கேள்விக்குறியாக உள்ளது. எங்கே ரெயின் வாட்டர் ஸ்டோரேஜ் என்ற ப்ராஜெக்ட்..? சென்னை கார்ப்பரேஷன் எங்கே தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு விண்ணப்பம் தான். நான் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கேட்கிறேன். நடிகனாக நான் என்றும் கேட்கவில்லை. சென்னையில் உள்ள தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியே வந்து இதனை சரி செய்து கொடுக்கணும்.

பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டாம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து இதனை சரி செய்து கொடுத்தால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். இருட்டில் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர்கள் இருப்பார்கள். இது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை.
தி நகரில் ஒரு சின்ன மழைக்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது. இப்ப எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கிகிறது . இது ரொம்ப தர்ம சங்கடமான கேவலமான விஷயமாக பார்க்கிறேன். இதற்கு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ..? அரசாங்கம் உடனடியாக தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம எல்லோரும் குடிமக்கள். நாமும் வரி கட்டுகிறோம். எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்தடாதீர்கள். எல்லோரும் தொகுதி எம் எல் ஏ ஏதாவது உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் .
இந்த சூழ்நிலையில் உங்கள் முகம் தெரிந்தால் நல்லா இருக்கும் என நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்.
மேயர் பிரியா பதிலடி
நடிகர் விஷால் பேசியதற்கு பதிலடி கொடுத்து பிரியா ராஜன் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், செம்பரம்பாக்கம் ஏரியை கூட முன்னறிவிப்பு இன்றி திறந்து விட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது .பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மற்றும் மாநகராட்சி ஊழியர்களும் ,செய்து வருகிறார்கள்.
அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றி தரும்..!! என பதிலடி கொடுத்துள்ளார்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}