சென்னை: நடிகர் விஷாலுக்கும் தனக்கும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறப் போவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில் சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகிடா படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் விஷால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து இந்த கிசுகிசு மேலும் உறுதியானது.
விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயக்குமார் மற்றும் நடிகர் ராதா ரவி ஆகியோர் இந்த கிசுகிசுப்பை உண்மையாக்கினர். இருவரும் மேடையில் வைத்து பகிரங்கமாக இருவரையும் வாழ்த்தினர். அதிலும் ஆர்.வி. உதயக்குமார், விஷால் ஒரு குழந்தை, அந்தக் குழந்தையை பத்திரமாக பாத்துக்கம்மா என்று சாய் தன்ஷிகாவைப் பார்த்துக் கூற, வெட்கப்பட்டு தலை குணிந்தபடி இருந்தார் விஷால்.
இந்த நிலையில் அதே மேடையில் வைத்து தங்களது காதலையும், திருமணத் தேதியையும் அறிவித்தார் சாய் தன்ஷிகா. ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார் சாய் தன்ஷிகா. நடிகர் விஷாலும் மேடையில் பேசும்போது இங்கு சாய் தன்ஷிகாவின் தந்தையும் இருக்கிறார். அவரது ஆசிர்வாதத்துடன் எங்களது திருமணத்தை அறிவிக்கிறேன். தன்ஷிகா அருமையான பெண் என்று புகழ்ந்து பேசினார்.
இதன் மூலம் கோலிவுட்டில் மீண்டும் ஒரு பிரமாண்ட நட்சத்திரத் திருமணம் அரங்கேறப் போகிறது. மேலும் கோலிவுட்டில் நீண்ட காலமாக பேச்சலராக இருந்து வந்த விஷால் அந்த வளையத்திலிருந்து குடும்பஸ்தனாக மாறப் போகிறார். அவரது செட்டைச் சேர்ந்த நடிகர்கள் ஜீவா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்டோர் ஏற்கனவே திருமணமாகி செட்டிலாகி விட்ட நிலையில் விஷால் மட்டும் பேச்சலராகவே வலம் வந்து கொண்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}