சென்னை: நடிகர் விஷாலுக்கும் தனக்கும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறப் போவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில் சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகிடா படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் விஷால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து இந்த கிசுகிசு மேலும் உறுதியானது.
விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயக்குமார் மற்றும் நடிகர் ராதா ரவி ஆகியோர் இந்த கிசுகிசுப்பை உண்மையாக்கினர். இருவரும் மேடையில் வைத்து பகிரங்கமாக இருவரையும் வாழ்த்தினர். அதிலும் ஆர்.வி. உதயக்குமார், விஷால் ஒரு குழந்தை, அந்தக் குழந்தையை பத்திரமாக பாத்துக்கம்மா என்று சாய் தன்ஷிகாவைப் பார்த்துக் கூற, வெட்கப்பட்டு தலை குணிந்தபடி இருந்தார் விஷால்.

இந்த நிலையில் அதே மேடையில் வைத்து தங்களது காதலையும், திருமணத் தேதியையும் அறிவித்தார் சாய் தன்ஷிகா. ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார் சாய் தன்ஷிகா. நடிகர் விஷாலும் மேடையில் பேசும்போது இங்கு சாய் தன்ஷிகாவின் தந்தையும் இருக்கிறார். அவரது ஆசிர்வாதத்துடன் எங்களது திருமணத்தை அறிவிக்கிறேன். தன்ஷிகா அருமையான பெண் என்று புகழ்ந்து பேசினார்.
இதன் மூலம் கோலிவுட்டில் மீண்டும் ஒரு பிரமாண்ட நட்சத்திரத் திருமணம் அரங்கேறப் போகிறது. மேலும் கோலிவுட்டில் நீண்ட காலமாக பேச்சலராக இருந்து வந்த விஷால் அந்த வளையத்திலிருந்து குடும்பஸ்தனாக மாறப் போகிறார். அவரது செட்டைச் சேர்ந்த நடிகர்கள் ஜீவா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்டோர் ஏற்கனவே திருமணமாகி செட்டிலாகி விட்ட நிலையில் விஷால் மட்டும் பேச்சலராகவே வலம் வந்து கொண்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}