சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு நடிகர் வைபவ் அஞ்சலி செலுத்தினார்.
தனக்கென்று தனி பானியை உருவாக்கி நகைச்சுவையின் மூலம் மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் விவேக். சின்ன கலைவாணர் என்ற சிறப்பு பெயருக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17ம் தேதி இறந்தார். இவரின் திடீர் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அப்துல் கலாமின் வழியை பின்பற்றி பல இடங்களில் பல லட்சம் மரங்களை நட்டவர் விவேக். அவர் இறந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன. அவரின் நினைவாக பலரும் மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ். நடிகர் வைபவின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

நடிகர் வைபவுடன், நடிகரும், விவேக்கின் மிக நெருங்கிய நண்பருமான செல்முருகனும் இணைந்து இதில் ஈடுபட்டார். மேலும் படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}