சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு நடிகர் வைபவ் அஞ்சலி செலுத்தினார்.
தனக்கென்று தனி பானியை உருவாக்கி நகைச்சுவையின் மூலம் மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் விவேக். சின்ன கலைவாணர் என்ற சிறப்பு பெயருக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17ம் தேதி இறந்தார். இவரின் திடீர் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அப்துல் கலாமின் வழியை பின்பற்றி பல இடங்களில் பல லட்சம் மரங்களை நட்டவர் விவேக். அவர் இறந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன. அவரின் நினைவாக பலரும் மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ். நடிகர் வைபவின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
நடிகர் வைபவுடன், நடிகரும், விவேக்கின் மிக நெருங்கிய நண்பருமான செல்முருகனும் இணைந்து இதில் ஈடுபட்டார். மேலும் படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}