நடிகர் விவேக் மறைந்து 3 ஆண்டுகள்.. மரக்கன்றுகளை நட்டு வைத்து திரையுலகினர் அஞ்சலி!

Apr 17, 2024,04:15 PM IST

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு  நடிகர் வைபவ் அஞ்சலி செலுத்தினார்.


தனக்கென்று தனி பானியை உருவாக்கி நகைச்சுவையின் மூலம் மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் விவேக். சின்ன கலைவாணர் என்ற சிறப்பு பெயருக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17ம் தேதி இறந்தார். இவரின் திடீர் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 




அப்துல் கலாமின்  வழியை பின்பற்றி பல இடங்களில் பல லட்சம் மரங்களை நட்டவர் விவேக். அவர் இறந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன. அவரின் நினைவாக பலரும் மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ். நடிகர் வைபவின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 




நடிகர் வைபவுடன், நடிகரும், விவேக்கின் மிக நெருங்கிய நண்பருமான செல்முருகனும் இணைந்து இதில் ஈடுபட்டார். மேலும் படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்