சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் இருவரும் சபரிமலைக்கு சென்றுள்ள புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் ரவி மோகன் மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் அடிப்படையில் நல்ல நண்பர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.ஜெயம் ரவி என்ற தனது பெயரை சமீபத்தில் ரவி மோகன் என்று மாற்றியுள்ளார். தற்போது ரவி மோகன் மற்றும் கார்த்தி ஆகியோர் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளனர்.

நடிகர் கார்த்தி வா வாத்தியார் மற்றும் சர்தார் ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அதே போல நடிகர் ரவி மோகனும் காராத்தே பாபு, ஜீனி திரைப்படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனி ஒருவன் 2 படத்திலும் ரவி மோகன் விரைவில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரவி மோகன் மற்றும் கார்த்திக் இருவரும் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இருவரும் மலையணிந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரவி மோகன் ஏற்கனவே ஐயப்பன் மலைக்கு சென்று அனுபவம் கொண்டவர். கார்த்தி முதல் முறையாக விரதம் கடைப்பிடித்து சபரிமலைக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும் சேர்ந்து சபரிமலைக்கு சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
{{comments.comment}}