கொச்சி: கேரளா சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடிகை பாவனா போட்டியிடப் போவதாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. இதற்கு அவர் விளக்கமாக பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறும் அதே சமயத்தில்தான் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தற்போது இடதுசாரி கூட்டணி 2வது முறையாக ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளது. பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் வென்ற உற்சாகத்தில் சட்டசபைத் தேர்தலிலும் ஏதாவது சாதிக்க முனைப்புடன் காத்திருக்கிறது.

இந்த நிலையில் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவரும், தமிழிலும் நடித்துள்ளவருமான நடிகை பாவனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து பாவனா விளக்கம் கொடுத்துள்ளார். நான் அரசியலுக்கு வருகிறேன் என்பது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை. எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.
தற்போது மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். எனது முழுக் கவனமும் சினிமாவிலேயே இருக்கிறது என்று கூறியுள்ளார் பாவனா.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}