சென்னை: நடிகை கெளதமி குற்றம் சாட்டியுள்ள சி. அழகப்பன் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் என்று தெரிய வந்துள்ளது. தற்போது கெளதமி புகாரைத் தொடர்ந்து அவரும் அவரது குடும்பத்தினரும் கூண்டோடு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
நடிகை கெளதமி பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணமாக அவர் கூறியிருப்பது தன்னை மோசடி செய்த சி. அழகப்பன் என்பவருக்கு பாஜக தலைவர்கள் ஆதரவாக இருப்பதே காரணம் என்று கூறியுள்ளார் கெளதமி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை கெளதமி புகார் கூறியுள்ள சி. அழகப்பன் என்பவர் பாஜகவைச் சேர்ந்தவர். அவர்தான் பவர் பத்திரம் மூலம் நடிகை கெளதமியின் சொத்துக்களை தனது குடும்பத்தின் பெயரில் மாற்றி விட்டதாக நடிகை கெளதமி போலீஸில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கிட்டத்தட்ட ரூ. 25 கோடி அளவிலான சொத்துக்களை அழகப்பன் குடும்பத்தினர் மோசடி செய்துள்ளதாக கெளதமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 2 புகார்களை கொடுத்துள்ளார் கெளதமி. அவர் கொடுத்த புகார்களின் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி அழகப்பன் குடும்பத்தினர் மனு செய்து அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம்.
சென்னை, ராமநாதபுரம் என பல்வேறு ஊர்களில் கெளதமி இந்த மோசடி தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. தற்போது கெளதமியின் தொடர் புகார்கள், வழக்குகள் காரணமாக சி. அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ் குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி வருகின்றனர்.
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}