சென்னை: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணன் மனைவி முஸ்கான் நான்சி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ஹன்சிகா மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிகை குஷ்பு சாயலில் இருப்பதால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.பிறகு எங்கேயும் எப்போதும், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆம்பள, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து புகழ்பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோட்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கான் நான்சிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் வாழ்ந்த பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கான் நான்சி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் ஹன்சிகா மோத்வானியும் அவரது தாயார் மோனா மோத்வானியும் என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு எனக்கும் என் கணவருக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். ஹன்சிகா மோத்வானி, அவரது தாயார் மற்றும் சகோதரர் மூவரும் என்னிடமிருந்து விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை கேட்கிறார்கள். சொத்து முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா குடும்பத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}