சென்னை: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணன் மனைவி முஸ்கான் நான்சி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ஹன்சிகா மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிகை குஷ்பு சாயலில் இருப்பதால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.பிறகு எங்கேயும் எப்போதும், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆம்பள, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து புகழ்பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோட்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கான் நான்சிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் வாழ்ந்த பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கான் நான்சி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் ஹன்சிகா மோத்வானியும் அவரது தாயார் மோனா மோத்வானியும் என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு எனக்கும் என் கணவருக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். ஹன்சிகா மோத்வானி, அவரது தாயார் மற்றும் சகோதரர் மூவரும் என்னிடமிருந்து விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை கேட்கிறார்கள். சொத்து முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா குடும்பத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}