குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கிறார் ஹன்சிகா.. அண்ணி கொடுத்த புகார்.. போலீஸ் விசாரணை!

Jan 08, 2025,04:24 PM IST

சென்னை: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணன் மனைவி முஸ்கான் நான்சி புகார் கொடுத்துள்ளார்.  இதையடுத்து ஹன்சிகா மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிகை குஷ்பு சாயலில் இருப்பதால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.பிறகு எங்கேயும் எப்போதும், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆம்பள, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னனி நட்சத்திரங்களுடன்  நடித்து புகழ்பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.




நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோட்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கான் நான்சிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் வாழ்ந்த பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கான் நான்சி  போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் ஹன்சிகா மோத்வானியும் அவரது தாயார் மோனா மோத்வானியும்  என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு எனக்கும் என் கணவருக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். ஹன்சிகா மோத்வானி, அவரது தாயார் மற்றும் சகோதரர் மூவரும்  என்னிடமிருந்து விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை கேட்கிறார்கள். சொத்து முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். 


இதுகுறித்து மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில்  ஹன்சிகா குடும்பத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!

news

தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை

news

வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்

news

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

news

நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்

news

துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்