சென்னை: நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என நடிகை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் மலையாளத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் பரிசு நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

மாஸ்டர் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதுமே பரபரப்பாக வைத்திருக்கிறார். சோசியல் மீடியா பக்கத்தில் எப்பவுமே ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இப்படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் மாளவிகா மோகனன்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது. சக நடிகை சௌகரியமாக அக்கறையுடன் அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் யாருமில்லை என தெரிவித்திருந்தார்.
மாளவிகா தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 திரைப்படத்திலும் கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யாவுடன் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறாராம் மாளவிகா. இதை தனது எக்ஸ் தளத்திலேயே ஓப்பனாக சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். அவரின் கண்கள் அழகாக பல பாவங்களை வெளிப்படுத்தக் கூடியவை. விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கங்குவா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}