சென்னை: நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என நடிகை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் மலையாளத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் பரிசு நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

மாஸ்டர் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதுமே பரபரப்பாக வைத்திருக்கிறார். சோசியல் மீடியா பக்கத்தில் எப்பவுமே ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இப்படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் மாளவிகா மோகனன்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது. சக நடிகை சௌகரியமாக அக்கறையுடன் அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் யாருமில்லை என தெரிவித்திருந்தார்.
மாளவிகா தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 திரைப்படத்திலும் கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யாவுடன் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறாராம் மாளவிகா. இதை தனது எக்ஸ் தளத்திலேயே ஓப்பனாக சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். அவரின் கண்கள் அழகாக பல பாவங்களை வெளிப்படுத்தக் கூடியவை. விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கங்குவா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}