சென்னை: நடிகை நமீதா மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.
நடிகை நமீதா துரைப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர், இரட்டைக் குழந்தைகளுடன் நமீதா அங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியே வெள்ளக்காடானது. இந்த வெள்ளத்தால் துரைப்பாக்கம் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது.
இதில் நமீதா வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பும் சிக்கிக் கொண்டது. அங்கு இடுப்புக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படைக்குத் தகவல் போனது. இதையடுத்து இன்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். நமீதா குடும்பத்தினர் மற்றும் அங்கு வசித்து வரும் பலரையும் மீட்டு படகு மூலம் வெளியே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து நமீதா கூறுகையில், அக்கம் பக்கத்தினர் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டோம். அந்தக் குடியிருப்பிலேயே நாங்கள்தான் கடைசியாக இப்போது மீட்கப்பட்டுள்ளோம். எங்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு நன்றி என்றார் நமீதா. நமீதா, கணவர், குழந்தைகள் தவிர அவர் வளர்த்து வரும் நாய்களும் கூட பத்திரமாக மீட்டுக் கொண்டு வரப்பட்டன.
ஏற்கனவே இதேபோல இந்தி நடிகர் அமீர் கான், நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரையும் வெள்ள பாதிப்பிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டது நினைவிருக்கலாம்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}