டெல்லி: இந்தியா என்று எதிர்க்கட்சிகள் கூட்டணிக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதால் பாஜகவினர் சமூக வலைதளங்களில் அதை பலவிதமாக சீண்டி கிண்டலடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை மீரா சோப்ரா (நிலா) நாட்டின் பெயரையே பாரத் என்று மாற்றி விடலாம் என்று பேசியுள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் கூடி பெங்களூரில் 2 நாட்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அந்த கூட்டத்தின் இறுதியில் கூட்டணிக்கு வைக்கப்பட்ட பெயர்தான்.
Indian National Developmental Inclusive Alliance -- INDIA என்று இக்கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளனர். அதிரடியாக இந்த பெயர் வைப்பு பிரபலமாகி விட்டது. நேற்று முதல் இது டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் பெயரையாரும் எதிர்பார்க்கவில்லை. வழக்கம் போல ஏதாவது முற்போக்குக் கூட்டணி, தேசிய கூட்டணி என்றுதான் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நாட்டின் பெயரையே கூட்டணிக்கு சூட்டிய சமயோசிதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த பெயருக்கு கவுன்டர் கொடுக்கும் நிலைக்கு நேற்று பாஜகவை தள்ளி விட்டது எதிர்க்கட்சிகளின் "இந்தியா". பிரதமர் நரேந்திர மோடியே இந்த பெயர் மாற்றம் தொடர்பாக தனது பாணியில் ஒரு விளக்கத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கொடுக்க நேரிட்டு விட்டது.
தற்போது பாஜகவினர் பலரும் இந்தியா என்று சொல்வதற்குப் பதில் பாரத் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தியா என்ற சொல்லை இனி யார் சொன்னாலும் அது எதிர்க்கட்சிக் கூட்டணியைக் குறிக்கும் வகையில் அமைந்து விடும் என்பதால் பாஜகவினருக்கு இது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் நடிகை நிலா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், நாம் அனைவரும் இனிமேல் நமது நாட்டை பாரத் என்று அழைப்போம் என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே முன்பு போட்ட ஒரு டிவீட்டில், எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குவது போல தெரிகிறது. அவர்கள் கூடுவதைப் பார்க்கும்போது சிங்கத்தை எதிர்த்து போராட துணிவது போலத்தான் தெரிகிறது என்று கிண்டலடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மீராவின் டிவீட்டைப் பார்த்த பலரும் முதலில் உங்க பயோவில் உள்ள இந்தியா என்ற பெயரை மாற்றுங்க பார்ப்போம் என்று நக்கலடித்து வருகின்றனர். அதில் India at cannes என்ற வார்த்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}