திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் துப்புறவுப் பணியாளர்கள் தன்னைத் தொடக்கூடாது என நடிகை ரோஜா கூறியதாக சர்ச்சை எழுந்து நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்து நான் மெதுவாக வாங்க என்றுதான் கை காட்டி கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா நேற்று சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ரோஜாவை பார்த்ததும் ஏராளமானோர் செல்பி எடுக்க ஆர்வமுடன் வந்தனர். இதனையடுத்து கோயில் உள்ள நிர்வாகிகள் ரோஜாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அங்கு செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை ரோஜா தள்ளி நின்று செல்பி எடுக்க சைகை காட்டுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த வீடியோ வைரல் ஆகி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. ரோஜைவை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதுகுறித்து ரோஜா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலில் தரைத்தளம் தாழ்வாக இருந்ததால் என்னுடன் செல்பி எடுக்க ஓடி வந்த தூய்மை பணியாளர்களை மெதுவாக வாங்க என கைகாட்டி கூறினேன். ஆனால் அவர்களை நான் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என சொன்னதாக தவறாக சித்தரித்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர்களை தொட வேண்டாம் என எப்படி சொல்லுவேன். என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது வருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}