திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் துப்புறவுப் பணியாளர்கள் தன்னைத் தொடக்கூடாது என நடிகை ரோஜா கூறியதாக சர்ச்சை எழுந்து நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்து நான் மெதுவாக வாங்க என்றுதான் கை காட்டி கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா நேற்று சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ரோஜாவை பார்த்ததும் ஏராளமானோர் செல்பி எடுக்க ஆர்வமுடன் வந்தனர். இதனையடுத்து கோயில் உள்ள நிர்வாகிகள் ரோஜாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அங்கு செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை ரோஜா தள்ளி நின்று செல்பி எடுக்க சைகை காட்டுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த வீடியோ வைரல் ஆகி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. ரோஜைவை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதுகுறித்து ரோஜா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலில் தரைத்தளம் தாழ்வாக இருந்ததால் என்னுடன் செல்பி எடுக்க ஓடி வந்த தூய்மை பணியாளர்களை மெதுவாக வாங்க என கைகாட்டி கூறினேன். ஆனால் அவர்களை நான் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என சொன்னதாக தவறாக சித்தரித்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர்களை தொட வேண்டாம் என எப்படி சொல்லுவேன். என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது வருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}