திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் துப்புறவுப் பணியாளர்கள் தன்னைத் தொடக்கூடாது என நடிகை ரோஜா கூறியதாக சர்ச்சை எழுந்து நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்து நான் மெதுவாக வாங்க என்றுதான் கை காட்டி கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா நேற்று சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ரோஜாவை பார்த்ததும் ஏராளமானோர் செல்பி எடுக்க ஆர்வமுடன் வந்தனர். இதனையடுத்து கோயில் உள்ள நிர்வாகிகள் ரோஜாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அங்கு செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை ரோஜா தள்ளி நின்று செல்பி எடுக்க சைகை காட்டுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த வீடியோ வைரல் ஆகி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. ரோஜைவை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதுகுறித்து ரோஜா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலில் தரைத்தளம் தாழ்வாக இருந்ததால் என்னுடன் செல்பி எடுக்க ஓடி வந்த தூய்மை பணியாளர்களை மெதுவாக வாங்க என கைகாட்டி கூறினேன். ஆனால் அவர்களை நான் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என சொன்னதாக தவறாக சித்தரித்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர்களை தொட வேண்டாம் என எப்படி சொல்லுவேன். என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது வருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}