அச்சச்சோ நான் தொடாதீங்கன்னு சொல்லலை.. மெதுவா வாங்கன்னுதான் சொன்னேன்.. நடிகை ரோஜா

Jul 18, 2024,03:02 PM IST

திருச்செந்தூர்:   திருச்செந்தூர் முருகன் கோவிலில் துப்புறவுப் பணியாளர்கள் தன்னைத் தொடக்கூடாது என நடிகை ரோஜா கூறியதாக சர்ச்சை எழுந்து நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்து நான் மெதுவாக வாங்க என்றுதான் கை காட்டி கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்.




முன்னாள் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா நேற்று  சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ரோஜாவை பார்த்ததும் ஏராளமானோர் செல்பி எடுக்க ஆர்வமுடன் வந்தனர். இதனையடுத்து கோயில் உள்ள நிர்வாகிகள் ரோஜாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அங்கு செல்பி எடுக்க வந்த  தூய்மை பணியாளர்களை ரோஜா  தள்ளி நின்று செல்பி எடுக்க சைகை காட்டுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.


இந்த வீடியோ வைரல் ஆகி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது.  ரோஜைவை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதுகுறித்து ரோஜா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலில் தரைத்தளம் தாழ்வாக இருந்ததால் என்னுடன் செல்பி எடுக்க ஓடி வந்த தூய்மை பணியாளர்களை மெதுவாக வாங்க என கைகாட்டி கூறினேன். ஆனால் அவர்களை நான் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என சொன்னதாக தவறாக சித்தரித்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர்களை தொட வேண்டாம் என எப்படி சொல்லுவேன். என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது வருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்