மும்பை: வடக்கு, தெற்கு என்று சினிமாத் துறை பிரிந்து இருக்காமல், இருவரும் இணைந்து பான் இந்தியா படங்களை உருவாக்க வேண்டும் என்று நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள தமன்னா அரண்மனை 4 திரைப்படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிக்கந்தர் கா முக்தார் என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார் தமன்னா. இந்த படத்தில் இவருடன் அவினாஷ் திவாரி, ஜிம்மி ஷெர்கில், திவ்யா தத்தா மற்றும் சோயா அப்ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இந்த படம் வரும் 29ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

இதனையடுத்து, தமன்னா திருமணத்திற்கு தயாராக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா 2025ல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு தமன்னா -விஜய் வர்மா திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தமன்னா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் கைவசம் உள்ள 2 படங்களை முடித்துவிட்டு திருமணத்திற்கு தயாராகப் போகிறாராம் தமன்னா.
இந்தப் பின்னணியில், வட மற்றும் தென் இந்திய சினிமாவில் உள்ள வேறுபாடுகளை பற்றி தமன்னா பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் சொந்த துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது சினிமாவை மேலும் அழிக்க மட்டுமே செய்திருக்கிறது. இதுதொடர்பான பழி எப்போதும் நடிகர் அல்லது நடிகைகள் மீதுதான் விழுகிறது.
வட இந்திய சினிமாத் துறையும் தென்னிந்திய சினிமாத் துறையும் ஒன்றிணைந்து ஒரு உண்மையான பான் இந்தியா திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆடி அசைந்து வரும் டித்வா புயல்.. சென்னையில் எப்போது மழை தொடங்கும்.. யாருக்கு ரெட்?
டிட்வா புயலால் நமக்கு மழை எப்படி இருக்கும்.. கலைஞர் ஸ்டைலில் பதில் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!
ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!
ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!
இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்
மூச்சு உள்ள வரை... அன்றும், இன்றும் என்றும் அதிமுக தான்...ஜெயக்குமார் உறுதி!
கருணாநிதிக்கு நெருக்கமானவர்.. கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமாருக்கு.. முதல்வர் புகழாரம்
அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!
ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு
{{comments.comment}}