பெரும் தள்ளுமுள்ளு.. மனைவியுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்தார் சீமான்

Sep 18, 2023,12:19 PM IST

சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பாக போலீஸார் பிறப்பித்த சம்மனைத் தொடர்ந்து இன்று காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார்.


நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமணம் செய்து விட்டு மோசடி செய்து விட்டார், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார் என்பது உள்ளிட்ட புகார்களைக கூறியிருந்தார் நடிகை விஜயலட்சுமி. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி மாஜிஸ்திரேட் மூலம் வாக்குமூலமும் பெற்றிருந்தனர்.


இந்த நிலையில் திடீரென பல்டி அடித்த விஜயலட்சுமி, சீமான் சூப்பர் தமிழ்நாட்டில் அவருக்குத்தான் ஃபுல் பவர் உள்ளது. அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நான் தோத்துப் போயிட்டேன்.. எனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி புகாரைத் திரும்பப் பெற்றார்.




இருப்பினும் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் விசாரணைக்கு சீமான் வந்தாக வேண்டும் என்பதில் போலீஸ் தரப்பு தீர்மானமாக இருந்தது. மேலும் அவருக்கு 2 வது முறையும் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து இன்று தனது மனைவியுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தார் சீமான்.


சீமான் வருகையையொட்டி நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கணக்கில் கூடி வளசரவாக்கம் காவல் நிலையப் பகுதியில் பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டனர். அந்தத் தெருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவிடவில்லை. சீமான் மற்றும் அவருடன் 5 பேரை மட்டுமே போலீஸார் அனுமதித்தனர். இதனால் சீமான், அவரது மனைவி மற்றும் வக்கீல்கள் மட்டுமே காவல் நிலையத்துக்குள் சென்றனர்.


போலீஸ் விசாரணைக்குப் பின்னர்தான் இந்த வழக்கு என்னாகும் என்பது தெரிய வரும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்