சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பாக போலீஸார் பிறப்பித்த சம்மனைத் தொடர்ந்து இன்று காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார்.
நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமணம் செய்து விட்டு மோசடி செய்து விட்டார், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார் என்பது உள்ளிட்ட புகார்களைக கூறியிருந்தார் நடிகை விஜயலட்சுமி. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி மாஜிஸ்திரேட் மூலம் வாக்குமூலமும் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென பல்டி அடித்த விஜயலட்சுமி, சீமான் சூப்பர் தமிழ்நாட்டில் அவருக்குத்தான் ஃபுல் பவர் உள்ளது. அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நான் தோத்துப் போயிட்டேன்.. எனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி புகாரைத் திரும்பப் பெற்றார்.
இருப்பினும் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் விசாரணைக்கு சீமான் வந்தாக வேண்டும் என்பதில் போலீஸ் தரப்பு தீர்மானமாக இருந்தது. மேலும் அவருக்கு 2 வது முறையும் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து இன்று தனது மனைவியுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தார் சீமான்.
சீமான் வருகையையொட்டி நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கணக்கில் கூடி வளசரவாக்கம் காவல் நிலையப் பகுதியில் பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டனர். அந்தத் தெருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவிடவில்லை. சீமான் மற்றும் அவருடன் 5 பேரை மட்டுமே போலீஸார் அனுமதித்தனர். இதனால் சீமான், அவரது மனைவி மற்றும் வக்கீல்கள் மட்டுமே காவல் நிலையத்துக்குள் சென்றனர்.
போலீஸ் விசாரணைக்குப் பின்னர்தான் இந்த வழக்கு என்னாகும் என்பது தெரிய வரும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}