நாங்க ரெடி.. ஆதித்யா எல் 1 கவுன்ட்டவுன் துவங்கியது.. இஸ்ரோ அறிவிப்பு

Sep 01, 2023,04:37 PM IST
டெல்லி : ஆதித்யா எல் 1 விண்கலத்தை சூரியனுக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், அதற்கான கவுன்ட்டவுன் துவங்கி விட்டதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 23 ம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 ன் பிரக்யான் ரோவர் கடந்த சில நாட்களாக நிலவில் ஆய்வுகளை நடத்தி வருகிறது. அங்கு நடத்தப்பட்டு வரும் ஆய்வு குறித்த தகவல்கள், நிலவின் புகைப்படங்கள் ஆகியவற்றை பூமிக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில் நிலவில் சல்ஃபர், ஆக்சிஜன், கால்சியம், மாங்கனீஷ் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டுபிடித்துள்ளது.




பிரக்யான் ரோவர் தினமும் நிலவில் என்ன செய்து கொண்டிருக்கிறது, அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது உள்ளிட்ட அப்டேட்களை தினமும் வெளியிட்டு வருகிறது. நிலவிற்கு சந்திரயான் 3 அனுப்பி வெற்றி பெற்ற கையோடு, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை அனுப்ப உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. செப்டம்பர் 02 ம் தேதி ஆதித்யா எல் 1 விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை ஆதித்யா எல் 1 விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் துவங்கி விட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.  செப்டம்பர் 02 ம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 சூரியனை ஆய்வு செய்ய புறப்பட உள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்கான ராக்கெட் மற்றும் செயற்கைகோள் இரண்டும் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி செய்துள்ளார்.

பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ., தூரம் பயணித்து, அங்கிருந்து சூரிய புயல், சூரிய கொரோனா உள்ளிட்ட சூரியனின் செயல்பாடுகளை கண்காணித்து முன்கூட்டியே அறிவிக்கும் பணியை ஆதித்யா எல் 1 செய்ய உள்ளது. பூமியின் காலநிலை மாறுபாட்டிற்கான காரணங்கள் குறித்தும் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஆதித்யா எல் 1 நாளை தனது பயணத்தை துவங்க உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்