சென்னை: சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர். அவருக்கு பல்வேறு கட்சிகளோடு தொடர்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவுக்குள் இழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமிர்ஷாவை சந்தித்தாக கூறப்பட்டது. அதே போல அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோடையனும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துறை சாமி அதிமுக விவகாரம் தொடர்பாக அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று சைதை துறை சாமி வலியுறுத்தி இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என கூறிவரும் நிலையில், சைதை துறை பேசியதற்கு கே.பி.முனுசாமி காட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே. பி. முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சைதை துறைசாமிக்கு எதிர்ப்பு வலுப்பதற்கு காரணம் களத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள். கட்சிக்காக அர்ப்பணித்து உழைக்கும் அதிமுகவினரை வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி விமர்சிக்கிறார். அவருக்கு பல்வேறு கட்சிகளோடு உள்ள தொடர்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவுக்குள் இழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
செங்கோட்டையன் எங்கள் கழகத்தில் முன்னோடி. அவர் அவருடைய பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில சந்தர்ப்பவாதிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். செங்கோட்டையன் டெல்லி சென்று நிதி அமைச்சரை பார்த்தார் அவ்வளவு தான். சிலர்தான் கண், மூக்கு வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}