சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர்: கே.பி.முனுசாமி கடும் தாக்கு!

Apr 05, 2025,03:42 PM IST

சென்னை: சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர். அவருக்கு பல்வேறு  கட்சிகளோடு தொடர்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவுக்குள் இழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.



 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமிர்ஷாவை சந்தித்தாக கூறப்பட்டது. அதே போல அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோடையனும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும்  நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார். 


இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துறை சாமி அதிமுக விவகாரம் தொடர்பாக அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று சைதை துறை சாமி வலியுறுத்தி இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என கூறிவரும் நிலையில்,  சைதை துறை பேசியதற்கு கே.பி.முனுசாமி காட்டமாக கூறியுள்ளார்.




இது குறித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே. பி. முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சைதை துறைசாமிக்கு எதிர்ப்பு வலுப்பதற்கு காரணம் களத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள். கட்சிக்காக அர்ப்பணித்து உழைக்கும் அதிமுகவினரை வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி விமர்சிக்கிறார். அவருக்கு பல்வேறு  கட்சிகளோடு உள்ள தொடர்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவுக்குள் இழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.


செங்கோட்டையன் எங்கள் கழகத்தில் முன்னோடி. அவர் அவருடைய பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில சந்தர்ப்பவாதிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். செங்கோட்டையன் டெல்லி சென்று நிதி அமைச்சரை பார்த்தார் அவ்வளவு தான். சிலர்தான் கண், மூக்கு வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்

news

பீகார் தேர்தல் 2025: பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும்.. எக்ஸிட் போல் முடிவுகளில் தகவல்!

news

SIRஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

news

போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு?... நயினார் நாகேந்திரன்!

news

பெண்களின் பாதுகாப்பிற்காக... இளஞ்சிவப்பு ரோந்து வானங்கள் சேவை தொடக்கம்!

news

வானிலை கொடுத்த அப்டேட்... தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

news

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல்.. திமுக ஆட்சி எதற்கு: எடப்பாடி பழனிச்சாமி

news

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

news

லோகேஷ் கனகராஜை புறக்கணித்தார்களா.. கமலும், ரஜினியும்.. பரபரக்கும் கோலிவுட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்