சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை ஸ்ரீனாரு வஙெ்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் , மாநில நிர்வாகிக், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரியாணி விருந்து நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து வரும் 18ம் தேதிக்குள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்திருந்தார். எனவே இது குறித்தும் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}