சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

Aug 18, 2025,06:44 PM IST
திருவண்ணாமலை: தமிழகத்தைச் சார்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜானாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு, கட்சி பேதம் இன்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 



அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பேசுகையில், தமிழகத்தை சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழகத்தை சார்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்