சென்னை: ஓபிஎஸ் உடன் இணைவதற்கு சாத்தியம் இல்லை. அதிமுக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு நேரில் வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஓபிஎஸ் உடன் இணைவதற்கு சாத்தியம் இல்லை. அதிமுக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. தமிழகப் பிரச்சனை குறித்து அமிக்ஷாவிடம் பேசினேன்.
தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும். தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். 11 மாதத்திற்கு முன்பு என்ன சொன்னாலும் நிலைக்காது. அதனால் கூட்டணி அமைக்கும் போது கட்டாயம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்களை மிரட்டுவதற்கு என்ன இருக்கிறது.
அதேபோல் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தான் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பேசுகிறோம். நாங்களாக எந்த கருத்தையும் சொல்வதில்லை. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் செய்தது யார் என்பதை கண்டுபிடியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}