சென்னை : கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகமெடுக்க துவங்கி உள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றிலும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படியும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு பொது மக்களை வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையில் இந்தியாவிலும் கொரானா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதிகபட்சமாக கேரளாவில் ஒரே நாளில் 200 க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது வரை கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி உள்ளது குறித்து மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
.jpg)
கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. லேசான அளவில் பரவ துவங்கி உள்ளது என்றாலும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. 10 நாட்களுக்கு முன் தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் 7,8 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் தற்போது 40 ஆக அதிகரிக்க துவங்கி உள்ளது. டிசம்பர் முதல் வாரத்திற்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பலவிதமான நோய்களும் பரவி வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவும் மீண்டும் பரவ துவங்கி உள்ளதால் மக்களிடையே அச்சம் ஏற்பட துவங்கி உள்ளது. ஆனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}