கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!

May 23, 2025,05:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடுமுறை விடப்பட்டிருந்தது. கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு விடுமுறை தேதி அறிவிக்கப்படும்.


இந்த நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கியதினால் வெப்பம் குறைந்து காணப்படுகிறது. இதனால், திட்டமிட்டு முன்னர் அறிவிக்கப்பட்ட ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 




2025-26ம் புதிய கல்வி ஆண்டில் 2.6.25 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


அதேபோல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்