சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் பாஜக கூட்டணி முறிவை திருவிழா போல கொண்டாடிக் கொண்டுள்ளனர். இப்பவே எங்களுக்கு தீபாவளி வந்துருச்சு என்று அவர்கள் கொண்டாடுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு கூட்டணி உருவாகும்போதுதான் அதைக் கொண்டாடுவார்கள். குறிப்பாக ஜெயலலிதாவுடன் முதல் முறையாக தேமுதிக கூட்டணி வைத்தபோது அதை இரு கட்சியினரும் அப்படிக் கொண்டாடித் தீர்த்தனர். தேமுதிகவினரை விட அதிமுகவினர்தான் அதிகமாக கொண்டாடினார்கள்.
இப்போது அதே அளவிலான கொண்டாட்டத்தை பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இது வித்தியாசமாக இருக்கிறது. எந்த ஒரு கூட்டணி முறிவையும் தமிழ்நாடு கொண்டாடி இதுவரை பார்த்ததில்லை என்பதால் மக்களுக்கும் கூட இது ஆச்சரியமாகவே இருக்கிறது.
இந்த அளவுக்குக் கொண்டாடுகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அவர்கள் சிரமப்பட்டுள்ளனர், கஷ்டப்பட்டுள்ளனர் என்றுதானே அர்த்தம் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. அதிமுகவினரும் கூட இதையே தெரிவிக்கின்றனர்.
பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில்,லேடியா மோடியா என்று கேட்ட கட்சி இது. எங்களால்தான் வளர்ந்தது பாஜக. எங்களது அம்மாவையே அவமானப்படுத்திப் பேசிய அண்ணாமலையை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இனி பாருங்க எங்களோட செயல்பாடுகளை என்று ஆவேசமாக கூறினார்.
இன்னொரு தொண்டர் கூறுகையில், எங்களால்தான் பாஜகவுக்கு வலிமையே கிடைத்தது. நாங்கள் கூட்டம் நடத்தும் போதெல்லாம் பத்தே பத்து பாஜகவினர்தான் வருவார்கள். கையில் பெரிய சைஸ் கொடியை மட்டுமே கொண்டு வருவார்கள்.. கூட்டம் நாங்கள் தான். இதுதான் அவர்களின் பலம். அவர்களால்தான் கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சியை இழந்தோம். இனி வரும் நாடாளுமன்றத்தில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். அதை அனைவரும் பார்ப்பீர்கள் என்றார்.
#நன்றி_மீண்டும்வராதீர்கள்
சமூக வலைதளங்களிலும் கூட #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை அதிமுகவினர் டிரண்ட் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் விதம் விதமாக இந்தப் பிரிவைக் கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகின்றனர்.
வழக்கமாக தேர்தல் வெற்றியின்போதுதான் அதிமுகவினர் இப்படி வெறித்தனமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இப்போது அவர்கள் கொண்டாடுவதைப் பார்த்து தமிழ்நாடே ஆச்சரியமாகப் பார்க்கிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}