மரபு மீறாதவர் என்றால்.. எங்களது துணைத்  தலைவருக்கு சீட் கொடுங்க.. எடப்பாடி பழனிச்சாமி பலே பேச்சு!

Feb 12, 2024,06:20 PM IST

சென்னை: மரபுகளை மீறக் கூடாது என்று சபாநாயகர் கூறுகிறார். அப்படியானால் அதிமுக கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்டப்படியான நடைமுறைகளால் தேர்வு செய்யப்பட்ட எங்களது எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு சட்டசபையில் உரிய இடத்தை சபாநாயகர் அப்பாவு ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


சட்டசபைக் கூட்டத்  தொடரில் ஆளுநர் உரைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி  பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:




கடந்த ஆண்டு போலவே, எந்தவிதமான குறிப்பும் ஆளுநர் உரையில் இல்லை. எந்தவிதமான கொள்கை விளக்கமும் முறையாக இல்லை. எனவே இந்த ஆட்சியால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டாது என்பதையே ஆளுநர் உரை உணர்த்துகிறது. புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத இந்த அரசு வெறும் பசப்பு வார்த்தை ஜாலங்களையே வாரியிறைத்துள்ளது. 


எனது அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து விட்டு தங்களது பெயரை தாங்களே சூட்டிக் கொண்டது வெட்கக்கேடானது. ஆளுநர் உரை உப்புச்சப்பில்லாத உரை, ஊசிப் போன உணவுப் பண்டம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.


தொடர்ந்து ஆளுநர் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கேட்டுள்ளார். அதை நிறைவேற்றாத காரணத்தால் அவர் உரையாற்றாமல் போயிருக்கிறார். 


இது அரசுக்கும் சபாநாயகருக்கும் இடையிலான பிரச்சினை. இதுகுறித்து அரசையும், ஆளுநரையும்தான் கேட்க வேண்டும். ஆளுநருக்கு என்ன பிரச்சினை, சபாநாயகருக்கு என்ன பிரச்சினை, அரசுக்கு என்ன பிரச்சினை என்பதை அவர்களிடத்தில்தான் கேட்க வேண்டும். அவர்களிடம் கேட்டால்தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும். 


மரபுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறுகிறார். சபாாயகரே பல மரபுகளை கடைப்பிடிக்கவில்லை. இதுகுறித்து நானே பலமுறை கோடிட்டுக்காட்டியுள்ளேன்.  இனியாவது கடைப்பிடிப்பார் என்று நம்புகிறோம். மரபைக் காக்க வேண்டும் என்று நாங்களும் எடுத்துச் சொல்வோம்.  எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கைக தொடர்பாக ஏதாவது காரணத்தைச் சொல்லி வருகிறார் சபாநாயகர். 


மரபை கடைப்பிடிக்க வேண்டும் என்று  சபாநாயகர் சொல்லியுள்ளார்.  எனவே, நாங்கள் வைத்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவது குறித்து பொதுமக்கள்தான் கேட்க வேண்டும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்