மரபு மீறாதவர் என்றால்.. எங்களது துணைத்  தலைவருக்கு சீட் கொடுங்க.. எடப்பாடி பழனிச்சாமி பலே பேச்சு!

Feb 12, 2024,06:20 PM IST

சென்னை: மரபுகளை மீறக் கூடாது என்று சபாநாயகர் கூறுகிறார். அப்படியானால் அதிமுக கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்டப்படியான நடைமுறைகளால் தேர்வு செய்யப்பட்ட எங்களது எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு சட்டசபையில் உரிய இடத்தை சபாநாயகர் அப்பாவு ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


சட்டசபைக் கூட்டத்  தொடரில் ஆளுநர் உரைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி  பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:




கடந்த ஆண்டு போலவே, எந்தவிதமான குறிப்பும் ஆளுநர் உரையில் இல்லை. எந்தவிதமான கொள்கை விளக்கமும் முறையாக இல்லை. எனவே இந்த ஆட்சியால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டாது என்பதையே ஆளுநர் உரை உணர்த்துகிறது. புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத இந்த அரசு வெறும் பசப்பு வார்த்தை ஜாலங்களையே வாரியிறைத்துள்ளது. 


எனது அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து விட்டு தங்களது பெயரை தாங்களே சூட்டிக் கொண்டது வெட்கக்கேடானது. ஆளுநர் உரை உப்புச்சப்பில்லாத உரை, ஊசிப் போன உணவுப் பண்டம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.


தொடர்ந்து ஆளுநர் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கேட்டுள்ளார். அதை நிறைவேற்றாத காரணத்தால் அவர் உரையாற்றாமல் போயிருக்கிறார். 


இது அரசுக்கும் சபாநாயகருக்கும் இடையிலான பிரச்சினை. இதுகுறித்து அரசையும், ஆளுநரையும்தான் கேட்க வேண்டும். ஆளுநருக்கு என்ன பிரச்சினை, சபாநாயகருக்கு என்ன பிரச்சினை, அரசுக்கு என்ன பிரச்சினை என்பதை அவர்களிடத்தில்தான் கேட்க வேண்டும். அவர்களிடம் கேட்டால்தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும். 


மரபுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறுகிறார். சபாாயகரே பல மரபுகளை கடைப்பிடிக்கவில்லை. இதுகுறித்து நானே பலமுறை கோடிட்டுக்காட்டியுள்ளேன்.  இனியாவது கடைப்பிடிப்பார் என்று நம்புகிறோம். மரபைக் காக்க வேண்டும் என்று நாங்களும் எடுத்துச் சொல்வோம்.  எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கைக தொடர்பாக ஏதாவது காரணத்தைச் சொல்லி வருகிறார் சபாநாயகர். 


மரபை கடைப்பிடிக்க வேண்டும் என்று  சபாநாயகர் சொல்லியுள்ளார்.  எனவே, நாங்கள் வைத்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவது குறித்து பொதுமக்கள்தான் கேட்க வேண்டும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்