"உண்மை பேசுங்க அண்ணாமலை".. அதிமுகவுக்குத் தாவிய பாஜக ஐடி விங் நிர்வாகி பாய்ச்சல்

Mar 11, 2023,09:44 AM IST
சென்னை: பர்கூர் இடைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்று கூறியுள்ளார் சமீபத்தில் பாஜகவிலிருந்து அதிமுகவுக்குப் போன முன்னாள் ஐடி விங் நிர்வாகி திலீப் கண்ணன்.

அதிமுக - பாஜக இடையே கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் உரசல் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெரியஅளவிலான தலைவர்கள் பாஜகவிடம் அடங்கிப் போவது போலதெரிந்தாலும், சமூக வலைதளங்களில் இரு தரப்பு ஐடி விங் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டுள்ளனர்.



சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த ஒரு பேட்டியின்போது ஜெயலலிதாவே டெபாசிட் இழந்தவர்தான் என்று கூறியிருந்தார். அதேபோல ஜெயலலிதாவை விட எனது தாயார் 100 மடங்கு பவர்புல், எனது மனைவி 1000 மடங்கு பவர்புல் என்று கூறியிருந்தார். இதுவும் அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அதிமுக தலைவர்கள் தரப்பில் இதற்கு பெரிய அளவில் ரியாக்ஷன் ஏதும் இல்லை. செல்லூர் ராஜுதான், நாவடக்கம் தேவை என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இடைக்காலப் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எதுவும் பேசவில்லை.

இந்த நிலையில்  சமீபத்தில் பாஜக ஐடி விங் செயலாளராக இருந்து அதிமுகவில் இணைந்த திலீப் கண்ணன், அண்ணாமலை பேச்சுக்கு புள்ளிவிவரத்துடன் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், 1996ல் பர்கூர் தேர்தலில் திமுக சுகவனம் -59148. அம்மா -50782  திமுக 50.7%. அதிமுக 43.5%. வித்தியாசம் 8366.

பிறகு எப்படி டெப்பாசிட் இழந்ததாக அண்ணாமலை சொல்கிறார்கள். கொஞ்சமாவது உண்மை பேசுங்க அண்ணாலை.. என்று கூறியுள்ளார் திலீப் கண்ணன்.

தனது அரசியல் வாழ்க்கையில், ஜெயலலிதா தோல்வியுற்றது என்றால் இந்த  ஒரு தேர்தலில் மட்டும்தான்.  இத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகவனம் அப்போது இளைஞர், புதுமுகம். யாரும் எதிர்பாராத வகையில் அத்தேர்தலில் ஜெயலலிதா தோல்வியுற்றார். இருப்பினும் அவர் டெபாசிட் இழக்கவில்லை என்பதே உண்மை.

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்