தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கியதினால் கடந்த 3 நாட்களாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 3 நாட்களுக்கு பின்னர் இன்று விமான சேவை தொடங்கப்பட்டது.
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி ஊரையே ஒரு வழியாக்கி விட்டது. இன்னும் கூட பெரும்பாலான இடங்களில் நீர் வடியவில்லை. இங்குள்ள மக்கள் மின்சாரம், போக்குவரத்து,ரயில் சேவை, விமான சேவை போன்ற பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். மழையின் தாக்கம் குறைந்ததினால், மீட்பு குழுவினர்கள் மீட்பு பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது தூத்துக்குடி. தேங்கிய தண்ணீர் இன்னும் முழுமையாக வடியாததினால் அதற்குரிய ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் தூத்துக்குடியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி - சென்னை இடையே தினமும் 3 விமானங்கள் வந்து போய் கொண்டு இருந்தது. இந்த சேவை கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழையால் வெள்ள நீர் விமான நிலையத்தையும் விட்டு வைக்காது அங்கும் தேங்கியது.
இந்த கனமழை காரணமாக சென்னை- தூத்துக்குடி இடையே செயல்பட்டு வந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. நேற்று மழை முழுவதும் குறைந்த வானிலை சீராகாத காரணத்தினால் விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் முன்பதிவு செய்திருந்த விமான பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இன்று வானிலை ஓராளவு சீரான நிலையில் சென்னை-தூத்துக்குடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}