மீண்டது விமான நிலையம்.. தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கியது விமான சேவை!

Dec 20, 2023,12:47 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கியதினால் கடந்த 3 நாட்களாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 3 நாட்களுக்கு பின்னர் இன்று விமான சேவை தொடங்கப்பட்டது.


தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி ஊரையே ஒரு வழியாக்கி விட்டது. இன்னும் கூட பெரும்பாலான இடங்களில் நீர் வடியவில்லை. இங்குள்ள மக்கள் மின்சாரம், போக்குவரத்து,ரயில் சேவை, விமான சேவை போன்ற பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். மழையின் தாக்கம் குறைந்ததினால், மீட்பு குழுவினர்கள் மீட்பு பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.


மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது தூத்துக்குடி. தேங்கிய தண்ணீர் இன்னும் முழுமையாக வடியாததினால் அதற்குரிய ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் தூத்துக்குடியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். 




தூத்துக்குடி - சென்னை இடையே தினமும் 3 விமானங்கள் வந்து போய் கொண்டு இருந்தது. இந்த சேவை கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழையால் வெள்ள நீர் விமான நிலையத்தையும் விட்டு வைக்காது அங்கும் தேங்கியது.


இந்த கனமழை காரணமாக சென்னை- தூத்துக்குடி இடையே செயல்பட்டு வந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. நேற்று மழை முழுவதும் குறைந்த  வானிலை சீராகாத காரணத்தினால் விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் முன்பதிவு செய்திருந்த விமான பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இன்று வானிலை ஓராளவு சீரான நிலையில் சென்னை-தூத்துக்குடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்