மீண்டது விமான நிலையம்.. தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கியது விமான சேவை!

Dec 20, 2023,12:47 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கியதினால் கடந்த 3 நாட்களாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 3 நாட்களுக்கு பின்னர் இன்று விமான சேவை தொடங்கப்பட்டது.


தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி ஊரையே ஒரு வழியாக்கி விட்டது. இன்னும் கூட பெரும்பாலான இடங்களில் நீர் வடியவில்லை. இங்குள்ள மக்கள் மின்சாரம், போக்குவரத்து,ரயில் சேவை, விமான சேவை போன்ற பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். மழையின் தாக்கம் குறைந்ததினால், மீட்பு குழுவினர்கள் மீட்பு பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.


மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது தூத்துக்குடி. தேங்கிய தண்ணீர் இன்னும் முழுமையாக வடியாததினால் அதற்குரிய ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் தூத்துக்குடியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். 




தூத்துக்குடி - சென்னை இடையே தினமும் 3 விமானங்கள் வந்து போய் கொண்டு இருந்தது. இந்த சேவை கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழையால் வெள்ள நீர் விமான நிலையத்தையும் விட்டு வைக்காது அங்கும் தேங்கியது.


இந்த கனமழை காரணமாக சென்னை- தூத்துக்குடி இடையே செயல்பட்டு வந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. நேற்று மழை முழுவதும் குறைந்த  வானிலை சீராகாத காரணத்தினால் விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் முன்பதிவு செய்திருந்த விமான பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இன்று வானிலை ஓராளவு சீரான நிலையில் சென்னை-தூத்துக்குடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்