சண்டிகர்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், விமானத் தாக்குதல் அபாயம் இருப்பதாக எல்லையைர மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சண்டிகர் நகரில், சைரன்கள் ஒலித்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால், சண்டிகரில் விமானத் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சண்டிகரின் பல பகுதிகளில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை தொடர்பான அபாயச் சங்கு ஒலித்தது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், பால்கனி அல்லது திறந்தவெளியில் இருக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். அவசர சேவைகள் தயார் நிலையில் உள்ளன. காவல்துறை ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விளக்குகளை அணைத்து, திரைச்சீலைகளை மூடி ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் மூடப்பட்டு, விமானப் படை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காவல்துறையினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணியில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
சண்டிகர் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளனர். சண்டிகருக்கு அருகில் உள்ள மொஹாலி பகுதியிலும் அபாய சைரன் ஒலிக்கப்பட்டது. இதுகுறித்து மொஹாலி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொஹாலி குடியிருப்பாளர்கள் எல்லைப் பகுதிகளில் ஜாக்கிரதையாக இருக்கவும், வீட்டுக்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிப் பலகைகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்துகிறோம்" என்றார்.
சண்டிகரின் சஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்திய விமானப் படை விமான நிலையத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொண்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டன. சண்டிகர் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (CHIAL) தலைமை நிர்வாக அதிகாரி அஜய் குமார் இது குறித்து கூறுகையில், விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமானப் படை நிலையமே விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனிக்கும் என்றார்.
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா
தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!
கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!
Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?
வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!
மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}