சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அக்டோபர் 31ம் தேதி விடுமுறையுடன் நவம்பர் 1ம் தேதியையும் தமிழக அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அத்துடன் சனி மற்றும் ஞாயிறும் விடுமுறை என்பதால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலை, படிப்பு காரணமாக சென்ற மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

அதற்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பார்கள். அப்படி செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்டுகளை பொது மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்குவார்கள். இதனால், டிக்கெட் கிடைக்காமல் பெரும்பாலானவர்கள் அவதிக்குள்ளாவர்கள். அத்தகையவர்கள் விமானம் மூலம் பயணிக்க எண்ணுவார்கள். இதனால் விமான பயணத்திற்கும் போட்டி அதிகளவில் இருக்கும் என்பதால், தற்போது விமான டிக்கெட் விலை ஒன்று அல்ல. இரண்டு அல்ல. தற்பொழுது 3 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-தூத்துக்குடி, சென்னை-மதுரை, சென்னை-திருச்சி, சென்னை-கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.4,109 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ. 8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கான விமானக்கட்டணம் ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை விற்கப்பட்டு வருகிறது.தீபாவளிக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், தற்போது விமானக்கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளிக்கு முதல் நாளான நாளை விமானக்கட்டணம் மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மிகுந்த வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}