சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அக்டோபர் 31ம் தேதி விடுமுறையுடன் நவம்பர் 1ம் தேதியையும் தமிழக அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அத்துடன் சனி மற்றும் ஞாயிறும் விடுமுறை என்பதால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலை, படிப்பு காரணமாக சென்ற மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அதற்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பார்கள். அப்படி செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்டுகளை பொது மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்குவார்கள். இதனால், டிக்கெட் கிடைக்காமல் பெரும்பாலானவர்கள் அவதிக்குள்ளாவர்கள். அத்தகையவர்கள் விமானம் மூலம் பயணிக்க எண்ணுவார்கள். இதனால் விமான பயணத்திற்கும் போட்டி அதிகளவில் இருக்கும் என்பதால், தற்போது விமான டிக்கெட் விலை ஒன்று அல்ல. இரண்டு அல்ல. தற்பொழுது 3 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-தூத்துக்குடி, சென்னை-மதுரை, சென்னை-திருச்சி, சென்னை-கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.4,109 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ. 8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கான விமானக்கட்டணம் ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை விற்கப்பட்டு வருகிறது.தீபாவளிக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், தற்போது விமானக்கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளிக்கு முதல் நாளான நாளை விமானக்கட்டணம் மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மிகுந்த வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}