டெல்லி: புதன் கிழமை காலை, நாட்டில் உள்ள பல விமான நிலையங்களில் செக்-இன் அமைப்புகள் செயலிழந்தன. இதனால் சில விமான சேவைகள் தாமதமாகின. பல விமானங்கள் ரத்தாகியுள்ளன.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் அமைப்பில் ஏற்பட்ட உலகளாவிய சேவை இடையூறுகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாரணாசி விமான நிலையத்தில் பயணிகளுக்கு அறிவிப்பு பலகைகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நான்கு விமான நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், அகசா ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்தக் குழப்பத்தால் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நிலைமையைச் சமாளிக்கும் வேலைகளில், விமான நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தாமதமான வருகை காரணமாக நான்கு விமானங்கள் தாமதமாகின. மேலும், இண்டிகோ விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ நிறுவனம் மொத்தம் 42 விமானங்களை இன்று ரத்து செய்தது. இதில் 22 வருகை விமானங்களும், 20 புறப்பாடு விமானங்களும் அடங்கும். டெல்லி சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான் காணப்பட்டது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}