தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம்.. இன்னும் 3 நாட்கள்தான்.. வெயிலையும் தாண்டி வேகம் காட்டும் தலைவர்கள்

Apr 15, 2024,05:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிரச்சாரம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள், தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வேகம் காட்டி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் பிரச்சாரம் ஓயும்.


பிரச்சாரம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளதால் அனைத்துக் கட்சியினரும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அனைத்து தலைவர்களும் தங்களது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். 




சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினும், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்யவுள்ளதால் சென்னை பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ளது.  முதல்வர் இன்று வட சென்னை மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவுள்ளார். மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய சென்னை, தென் சென்னை வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதில் மத்திய சென்னையில் தேமுதிக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மறுபக்கம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. கடைசிக் கட்ட பிரச்சாரம் என்பதால் பெருமளவில் கூட்டம் காட்ட பாஜகவினர் ஆர்வமாக உள்ளனர். ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.


அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார். 


தமிழ்நாட்டில் பிரச்சாரம் ஓயப் போவதால் பல்வேறு மத்திய அமைச்சர்களும், அகில இந்தியத் தலைவர்களும் தொடர்ந்து முகாமிட்டபடி உள்ளதால் மாநிலமே பரபரப்பாக காணப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்