சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் 40 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. அதே போல் விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளரின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் எப்போது வரும்.. எப்போது வரும்.. என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் வெகு விமர்சையாக ஜனநாயக திருவிழா நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுவையில் ஒரு தொகுதியும் உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விளவங்கோடு சட்டசபைத் தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது அக்கட்சி.
இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்து, இன்று அந்த மனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாக்கல் செய்த ஒரு வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு விட்டன. அதாவது 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கிறது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளரின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கன்னியாகுமரியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். இன்று இரவு அவர் நெல்லை பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}