மது பிரியர்களே No cheers!.. பிப்ரவரி 1 முதல்.. தமிழகம் முழுவதும்.. மது விலை உயரப் போகுது!

Jan 30, 2024,06:05 PM IST
சென்னை: தமிழக முழுவதும் டாஸ்மார்க் கடைகளில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மது பிரியர்கள்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறார்கள். சாயந்திரம் 6 மணிக்கு மேல் தெருவுக்குத் தெரு "சியர்ஸ்"தான்.. காய்கறிக் கடை போல டாஸ்மாக் கடைகளும் ஏகமாகவே உள்ளன. அந்த அளவுக்கு மது பிரியர்களும், டாஸ்மார்க் கடைகளும் பெருமளவில் உள்ளனர். 

தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலமாகவே பெருமளவு வருமானம் வருகிறது. இதை வைத்துத்தான் பல திட்டங்களுக்கு அரசு செலவிட்டு வருகிறது. சமீபகாலமாக வெள்ளம், மழை  போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய அதிகமாக நிவாரணத் தொகை செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  நிதி நிலைமையை சமாளிப்பதற்காக குடிகாரர்களின் பாக்கெட்டில் கை வைக்கவுள்ளனர். அதாவது டாஸ்மாக் மது பானங்களின் விலையை உயர்த்தியுள்ளனர்.




தமிழகம் முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நடுத்தர வகை, சாதாரண வகை, உயர்தர வகை,பீர், ரம், ஒயின் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விலை உயர்த்தப்படும்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலையை உயர்த்துவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,  குவார்ட்டர் அதாவது 180 மில்லி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரகம் மதுவின் விலை 10 ரூபாய் உயர்ந்தப்பட்டுள்ளது. அதே மாதிரி 180 மில்லி கொண்ட உயர்தர மதுவின் விலை ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது. ஆப் மற்றும் ஃபுல் அளவு கொண்ட மது பானங்கள் 30 முதல் 80 ரூபாய் வரை விலை உயருகிறது.

மேலும் பீர், ரம், ஒயின், உள்ளிட்ட மது வகைகள் 650 மில்லி அளவு கொண்ட மது பானங்களின் விலை ரூபாய் 10 உயர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சியர்ஸ் மக்களே!

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்