சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில்உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற 31ம் தேதி கொண்டாட இருப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை வருகிற அக்., 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொது மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கூட்டுறவு துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 24,610 முழு நேர நியாய விலை கடைகள் 10,164 பகுதி நேர நியாயவிலை கடைகள் என மொத்தம் 34,774 நியாய விலை கடைகளில் குடிமைப் பொருட்களை பெற்று, தீபாவளி பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாய விலை கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 27.10.2024 அன்று முழுவதுமாக வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}