சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில்உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற 31ம் தேதி கொண்டாட இருப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை வருகிற அக்., 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொது மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கூட்டுறவு துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 24,610 முழு நேர நியாய விலை கடைகள் 10,164 பகுதி நேர நியாயவிலை கடைகள் என மொத்தம் 34,774 நியாய விலை கடைகளில் குடிமைப் பொருட்களை பெற்று, தீபாவளி பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாய விலை கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 27.10.2024 அன்று முழுவதுமாக வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}