Ration shops: தமிழ்நாட்டில்.. ரேஷன் கடைகள் நாளை இயங்கும்.. மக்களே இதைக் கவனிங்க!

May 25, 2024,04:33 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் நாளை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு முதல் இரண்டு வாரம் வெள்ளிக்கிழமை வார விடுமுறையாகும். கடைசி 2 வாரத்தில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகும். அதன்படி நாளை விடுமுறை நாளாகும். இருப்பினும் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறையின் செயலாளர் ஹர்சஹாய் மீனா ஒரு சர்க்குலரை அனுப்பியுள்ளார். அதில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை உரிய காலத்துக்குள் வழங்குவதற்கு வசதியாக நாளை பணி நாளாக கருதப்பட்டு ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கும்.  நாளைக்குப் பதில் வேறு ஒரு நாளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவித்துள்ளார். 



தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் புதிய கார்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக காத்திருப்போர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

புதிய ரேஷன் கிடைத்தால் அதை வைத்து மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் பல பெண்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்