Ration shops: தமிழ்நாட்டில்.. ரேஷன் கடைகள் நாளை இயங்கும்.. மக்களே இதைக் கவனிங்க!

May 25, 2024,04:33 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் நாளை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு முதல் இரண்டு வாரம் வெள்ளிக்கிழமை வார விடுமுறையாகும். கடைசி 2 வாரத்தில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகும். அதன்படி நாளை விடுமுறை நாளாகும். இருப்பினும் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறையின் செயலாளர் ஹர்சஹாய் மீனா ஒரு சர்க்குலரை அனுப்பியுள்ளார். அதில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை உரிய காலத்துக்குள் வழங்குவதற்கு வசதியாக நாளை பணி நாளாக கருதப்பட்டு ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கும்.  நாளைக்குப் பதில் வேறு ஒரு நாளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவித்துள்ளார். 



தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் புதிய கார்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக காத்திருப்போர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

புதிய ரேஷன் கிடைத்தால் அதை வைத்து மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் பல பெண்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

அதிகம் பார்க்கும் செய்திகள்