Ration shops: தமிழ்நாட்டில்.. ரேஷன் கடைகள் நாளை இயங்கும்.. மக்களே இதைக் கவனிங்க!

May 25, 2024,04:33 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் நாளை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு முதல் இரண்டு வாரம் வெள்ளிக்கிழமை வார விடுமுறையாகும். கடைசி 2 வாரத்தில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகும். அதன்படி நாளை விடுமுறை நாளாகும். இருப்பினும் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறையின் செயலாளர் ஹர்சஹாய் மீனா ஒரு சர்க்குலரை அனுப்பியுள்ளார். அதில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை உரிய காலத்துக்குள் வழங்குவதற்கு வசதியாக நாளை பணி நாளாக கருதப்பட்டு ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கும்.  நாளைக்குப் பதில் வேறு ஒரு நாளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவித்துள்ளார். 



தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் புதிய கார்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக காத்திருப்போர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

புதிய ரேஷன் கிடைத்தால் அதை வைத்து மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் பல பெண்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்