Schools reopening: பசங்களா பைகளை ரெடி பண்ணுங்க.. தமிழ்நாட்டில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு!

May 24, 2024,02:51 PM IST

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது. அதன்பின்னர் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை  முடிந்து ஜூன் முதல் வாரத்தில் தான் பள்ளிகள் திறக்கப்படும். இருப்பினும் ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தலின் வாக்குகள் எண்ணப்படுவதால் பள்ளிகள் திறப்பது எப்போது இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். 


இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அறிவிப்பின் படி ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:



அதில், " 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது"  என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் தள பதிவில், " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி 2024-2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.  மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம்" என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்