சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், நாளை மறு நாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவர் தியானம் செய்யவுள்ள, கன்னியாகுமரியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வர உள்ளார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மண்டபத்தில் அமர்ந்து இரவு பகலாக 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும் என்று தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளது. அதேசமயம், பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திண்டிவனத்தில் செய்தியாளர்ளை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், பிரதமர் தியானம் மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை. இதனை மறைமுக தேர்தல் பரப்புரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அனைவருக்கும் தியானம் மேற்கொள்ளும் உரிமை உள்ளது. 2019 ஆம் ஆண்டு கூட கேதார்நாத்தில் பிரதமர் மோடி தியானம் செய்திருந்தார். இதில் தவறில்லை என்றார்.
த.மா.கா.தலைவர் ஜிகே வாசன் கூறுகையில், கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வது அவரது உயர் ஆன்மீகத்திற்கு எடுத்துக்காட்டு. பிரதமர் ஆன்மீகப் பயணிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கும், வாக்குப்பதிவிற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக குறை கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ், திமுக கூட்டணியின் குறுகிய பார்வைக்கு இது எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.
அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறும்போது, திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும். இங்கு இருப்பவர்கள் எல்லாம் சோமாலிய நாட்டில் உள்ளவர்களை போல மாறி நிற்பது தான் நடக்கும். இப்பொழுது மலிவான அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமர் வந்து அவர் பாட்டுக்கு தியானம் பண்ணுவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது. நல்ல விஷயம் தான். இதை நான் கூட்டணிக்காக சொல்லவில்லை. பொதுவாகவே சொல்கிறேன் என்றார்.
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}