சென்னை: குமரி அனந்தன் மறைவையொட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறியுள்ளார்.
2026ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இந்நிலையில் வருகிற 2026ம் ஆண்டில் எப்படியாவது தமிழ்நாட்டில் கால் பதித்து விட வேண்டும் என்று பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் ஓர் ஆண்டு காலம் உள்ள நிலையில், தற்பொழுதே பாஜக கூட்டணி குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவும், பாஜக தமிழக தலைவர் மாற்றம் குறித்து முடிவு செய்வதற்காகவும் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்.

இரவு முழுவதும் ஆலோசனை மேற்கொண்ட அமித்ஷா, இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி குறித்து அறிவிக்க இருக்கிறார். இதற்கு முன்னர் கிண்டியில் அமித்ஷா தங்கயிருந்த ஓட்டலில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு அமித்ஷா நேரில் சென்றார்.
தமிழிசையை நேரில் சந்தித்தார். தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவையொட்டி தமிழிசைக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்
அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக
ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
ஜனநாயகன் விவகாரம் முடிவுக்கு வருகிறதா? நாளை தணிக்கை குழு மறுஆய்வு
விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? செங்கோட்டையன் சொன்ன காட்டமான பதில்
தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
தேர்தல் 2026 ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
{{comments.comment}}