சென்னை: குமரி அனந்தன் மறைவையொட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறியுள்ளார்.
2026ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இந்நிலையில் வருகிற 2026ம் ஆண்டில் எப்படியாவது தமிழ்நாட்டில் கால் பதித்து விட வேண்டும் என்று பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் ஓர் ஆண்டு காலம் உள்ள நிலையில், தற்பொழுதே பாஜக கூட்டணி குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவும், பாஜக தமிழக தலைவர் மாற்றம் குறித்து முடிவு செய்வதற்காகவும் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்.

இரவு முழுவதும் ஆலோசனை மேற்கொண்ட அமித்ஷா, இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி குறித்து அறிவிக்க இருக்கிறார். இதற்கு முன்னர் கிண்டியில் அமித்ஷா தங்கயிருந்த ஓட்டலில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு அமித்ஷா நேரில் சென்றார்.
தமிழிசையை நேரில் சந்தித்தார். தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவையொட்டி தமிழிசைக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}